26,000 குச்சிகளை கொண்டு ரங்கோலி

26,000 குச்சிகளை கொண்டு ரங்கோலி

2 mins read
90136e78-2809-4c79-a697-afb61de1e2c9
-

திரு­மதி சுதா ரவி, புத்­தாக்க வடி­வில் 26,000 பாப்ஸ்­சிக்­கல் குச்சி­களைக் கொண்டு ஒரு மாத­மாக திட்­டமிட்டு, பாடு­பட்டு ஆறு மீட்டர் உய­ரம், ஆறு மீட்­டர் அக­லம் கொண்ட வண்ண ரங்­கோ­லியை உரு­வாக்கி அதைச் சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இடம்­பெ­றச் செய்­துள்­ளார்.

தமிழ் அறி­ஞர்­க­ளான திரு­வள்­ளு­வர், ஔவை­யார், பார­தி­யார், பார­தி­தா­சன் ஆகி­யோ­ரின் முகங்­க­ளைச் சித்­தி­ரிக்­கும் வகை­யில் உரு­வான இந்த ரங்­கோலி, சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இடம்­பி­டித்த சுதா ரவி­யின் நான்­கா­வது படைப்­பா­கும்.

ரங்­கோ­லி­யி­லும் தமி­ழர் பாரம்­பரிய விழு­மி­யங்­க­ளி­லும் தன்­னு­டைய 17 வயது மகள் ரக்‌ஷிதா ரவியை அறி­மு­கப்­ப­டுத்திய சுதா ­ரவி, மக­ளின் ஆத­ர­வோடு இந்­தக் கண்­ணைப் பறிக்­கும் ரங்­கோ­லி­யைப் படைத்­தார்.

தமிழ் இலக்­கி­யத்தை ஆடல், பாடல் மூலம் ஊக்­கு­விக்­கும் கலா­மஞ்­சரி எனும் அமைப்பு, லிஷா ஆத­ர­வில் ஏற்­பாடு செய்­தி­ருந்த 'எண்­ண­மும் வண்­ண­மும்' எனும் கலை நிகழ்ச்­சி­யில், இந்த ரங்­கோலி பார்­வை­யா­ளர்­க­ளின் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

தைத் திரு­நாளை முன்­னிட்டு இம்மாதம் 21ஆம் தேதி தேக்கா பிளே­ஸில் நடந்த நி­கழ்ச்­சியில் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூத­ர­கத்­தின் முத­லாம் செய­லாளர் திரு டி. பிர­பா­கர் கலந்­துகொண்டு சிறப்­பித்­தார்.

ரங்­கோலி படைப்­புக்கு அரிசி மாவு, சாப்ஸ்­டிக் குச்­சி­கள் போன்­ற­வற்றை இதற்கு முன்­னர் பயன்­படுத்­திய சுதா ரவி, இம்­முறை புதுமை­யாக அக்­ரி­லிக் எண்­ணெய் ஓவிய வண்­ணங்­களைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்.

ரங்­கோ­லியை ரசித்­த­து­மின்றி, கலா­மஞ்­ச­ரி­யின் வய­லின், மிரு­தங்­கக் கலை­ஞர்­கள், பாட­கர்­களின் இசை, பாடல், அறி­ஞர்­களின் கவி­தை­களை மையப்­படுத்தி அரங்கேறிய கர்­நா­டக இசை மழை­யி­லும் பார்வை­யா­ளர்­கள் நனைந்­த­னர்.

"நான்கு ஆண்­டு­க­ளுக்கு மேலாக பாரம்­ப­ரிய நிகழ்ச்­சி­களைப் படைத்­துக்­கொண்டு வரும் எங்­க­ளுக்கு இந்த நிகழ்ச்சி பெரு­மைக்­கு­ரிய ஒன்று.

"என் நெருங்­கிய தோழி சுதா ரவி­யின் மகள் ரங்­கோலி இடு­வதில் இணைந்­தது, நம் இளைய தலை­மு­றை­யி­னர் தமி­ழர் பண்­பாட்டை எடுத்­துச் செல்­வார்­கள் என்­ப­தற்­கான ஒரு சான்­றா­கும்," என்­றார் கலா­மஞ்­சரி அமைப்­பின் நிறு­வ­னர் திரு­மதி சௌந்­தர நாயகி வைர­வன்.

ஒவ்­வொரு கலா­மஞ்­சரி நிகழ்ச்சி­யை­யும் தவ­றா­மல் பார்வை­யிடும், திரு­மதி ரஜினி அசோ­கன், 55, இந்த ரங்­கோலி பிர­மிக்கவைக்கும் அள­வில் மிக அழ­கானதாகவும் தமிழர் கலா­சாரத்­திற்குப் பெருமை அளிப்­பதா­க­வும் உள்ளது என்று தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

வங்­கி­யில் பணி­பு­ரி­யும் திரு­மதி சுதா ரவி, "இரவு பகல் பாரா­மல் நானும் என் மகளும் உரு­வாக்­கிய இந்த ரங்­கோலி எங்­க­ளுக்­குப் பேரளவில் பெருமை சேர்த்துள்­ளது. மேன்­மே­லும் நாங்­கள் புது­மை­யான ரங்­கோ­லி­க­ளைப் படைக்க முனைந்­துள்­ளோம்." என்­றார்.