புத்தாண்டில் அடித்தது யோகம்: அதிர்ஷ்டத்திலும் பேரதிர்ஷ்டம்

புத்தாண்டில் அடித்தது யோகம்: அதிர்ஷ்டத்திலும் பேரதிர்ஷ்டம்

2 mins read
00222f30-5fd9-4a42-b547-e32f74a26897
-

திரு எட்­வின் சுவா, 35, சிங்­கப்­பூர் ஆயுதப் படை­யில் அதி­கா­ரி­யாக பணி­யாற்­று­கி­றார்.

அவ­ரின் மனை­வி­யான டாக்­டர் கிளாரி லோ, 33, உடற்­பயிற்சி சிகிச்சை நிபு­ணர்.

கடந்த 2014ல் திரு­ம­ண­மான இத்­தம்­ப­திக்கு அதிக பிள்­ளை­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும், தங்­கள் குடும்­பம் பெரிய குடும்­ப­மா­கத் திகழ வேண்­டும் என்­பது கொள்ளை ஆசை. ஆனால் திரு­ம­ணத்­திற்­குப் பிறகு சில ஆண்­டு­க­ளாக பிள்­ளை­கள் பிறக்­க­வில்லை. தம்பதியர் செயற்கை இனப்­பெருக்க முறை­களை நாடி­னர்.

இந்­நி­லை­யில், இத்­தம்­ப­திக்கு இயற்­கை­யான முறை­யில் ஓர் ஆண் குழந்தை பிறந்­தது. கெய்த் என்ற அந்த மக­னுக்கு இப்­போது வயது இரண்டு.

இத­னி­டையே, செயற்கை இனப்பெருக்க முறை மூலம் உறை­ய­வைக்­கப்­பட்ட கருமுளை ஒன்­றைப் பயன்படுத்தி இரண்­டா­வது பிள்ளையைப் பெற்­றுக்கொள்­ள­லாம் என்று சென்ற ஆண்டு மே மாதம் இத்­தம்­பதியர் முடிவு செய்­த­னர்.

அதன்­படி டாக்­டர் லோ கரு­வுற்­றார். ஆறு மாத கர்ப்­பி­ணி­யாக அவர் இருந்­த­போது தன் வயிற்­றில் இரட்டை பிள்­ளை­கள் வளர்­வது அவ­ருக்­குத் தெரியவந்­தது.

அந்த மாது 168 செ.மீ. உயரம் உள்­ள­வர். எடை 52 கிலோ­தான், தன்­னால் இரண்டு பிள்­ளை­களை வயிற்­றில் சுமந்து பிர­ச­விக்க முடி­யுமா என்று அவர் பயந்­து­விட்­டார்.

இந்­நி­லை­யில், அவர் வயிற்றில் மொத்­தம் மூன்று பிள்­ளைகள் வளர்­வது பிறகு தெரியவந்­தது. கடை­சி­யாக ஜன­வரி 3ஆம் தேதி கேகே மருத்­து­வ­மனை­யில் அவ­ருக்­குப் கேரத், கென்­னத், சேத் என்ற மூன்று ஆண் பிள்­ளை­கள் ஒரு நிமிட இடை­வெ­ளி­யில் ஒன்­றன் பின் ஒன்­றாக பிறந்­தன.

அப்­போது அந்­தப் பெண்­மணி 34 வாரக் கர்ப்­பிணி.

அறுவை சிகிச்சை மூலம் குழந்­தை­கள் பிறந்­தன. அதிக பிள்­ளை­கள் வேண்­டும் என்று ஆசைப்­பட்ட சுவா-லோ தம்­ப­திக்­குப் புத்­தாண்­டில் அடித்­தது யோகம்.

பொது­வாக கரு­முளை ஒன்றில் இருந்து மூன்று குழந்தை­கள் உரு­வா­வ­தென்­பது மிக­வும் அரி­தா­னது என்­பதால் அதிர்ஷ்­டத்­தி­லும் பேர­திர்ஷ்­டம் அடித்து இருப்­ப­தாக தம்­ப­தி­யர் மகிழ்­கி­றார்­கள்.

அதிக பிள்­ளை­கள் வேண்டும்; குடும்பம் பெரி­தாக இருக்க வேண்­டும் என்ற இந்தக் குடும்­பத்­தின் கனவு நன­வாகி இருக்­கிறது.