கலை, கலாசாரம் தழுவிய சமூகப் பிணைப்பு அவசியம்: எட்வின்

கலை, கலாசாரம் தழுவிய சமூகப் பிணைப்பு அவசியம்: எட்வின்

2 mins read
fcd512bf-aacd-4020-b65b-f1241f04dd10
-

சமூ­கப் பிணைப்­பை­யும் உடன் இருக்­கும் உணர்­வை­யும் வலுப்­

ப­டுத்­து­வது, சிறந்த சமூ­கத்தை உரு­வாக்­கப் பணி­யாற்­று­வது போன்­றவை சிங்­கப்­பூ­ரர்­கள் ஒற்­று­மை­யு­டன் நீடிக்க உத­வும்.

தொடர்ந்து முன்­னே­று­வ­தில் சிங்­கப்­பூர் கவ­னம் செலுத்­தி­

வ­ரும் அதே­ச­ம­யம் அது எதிர்­கொள்­ளக்­கூ­டிய சவால்­க­ளைச் சமா­ளிக்க இந்த ஒற்­றுமை இன்றி­ ய­மை­யா­தது என்று கலா­சார, சமூக, இளை­யர்துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­துள்­ளார்.

வசந்­த­கா­லத் திரு­விழா வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட திரு எட்­வின், புவி­சார் அர­சி­யல் பதற்­ற­மும் உல­க­ளா­விய பொரு­ளி­யல் குறித்த எச்­ச­ரிக்­கை­யும் அந்த சவால்­களில் சில என்­றார்.

சிங்­கப்­பூர் சீன கலா­சார மைய­மும் சிங்­கப்­பூர் சீன குல­வ­ழிச் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பும் இணைந்து நடத்­திய இந்த வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் சீன சமூக மக்­களும் தலை­வர்­களும் கலந்­து­ கொண்­ட­னர்.

திரு எட்­வின் பேசு­கை­யில், "நமது தலை­மு­றை­யி­ன­ரைப் புரிந்து நடந்­து­கொள்­ள­வும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய பகிர்வு அனு­ப­வங்­களை சக சிங்­கப்­பூ­ரர்­க­ளு­டன் இணைந்து உரு­வாக்­க­வும் கலை, கலா­சா­ரம் மற்­றும் மர­பு­டைமை தொடர்­பான அம்­சங்­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் பங்­கேற்­பது அவ­சி­யம்.

"வலு­வான தோழமை உணர்வு, இரு­த­ரப்பு நம்­பிக்கை ஆகி­ய­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­களை வளர்க்க கலை­யும் கலா­சா­ர­மும் கை

கொ­டுக்­கும்.

"எனவே, இவற்­றில் பங்­கேற்­பதை நாம் தொடர வேண்­டும். அத்­து­டன் பல்­வேறு பின்­ன­ணி­

க­ளைக் கொண்­டோரை ஓர­ணி­யில் திரட்­டு­வ­தை­யும் நாம் தொட­ரு­வது அவ­சி­யம்.

"நெருக்­கத்­தைப் பேண நாம் சமூ­கங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­று­கி­றோம். அதே­போல ஒரு­வர்­மீது ஒரு­வர் கவ­னம் செலுத்­தி, பரா­ம­ரிக்­கும் கலா­சா­ரத்­தைப் பின்­பற்­று­கி­றோம். இவை இரண்­டும் நமது சிங்­கப்­பூர் சமூ­கத்­தின் மீள்­தி­றனை மேம்­ப­டுத்­தும்," என்று திரு எட்­வின் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.