கேகே மகளிர் சிறார் மருத்துவமனை, புதிதாகப் பிறந்த சிசுக்களை மருத்துவமனையில் உள்ள மற்ற பிரிவுகளிடம் ஒப்படைக்கும் வரை அவற்றின் உயிர் நாடியைத் தொடர்ந்து கண்காணிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு 11 நாள் சிசு அங்கு இறந்ததை அடுத்து அது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அந்த ஆண்மகவு பிறந்த பின் சுமார் 53 நிமிடத்துக்கு அதன் உயிர் நாடி கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை என்று மரண விசாரணை நீதிபதி ஆடம் நக்கோடா கூறினார். தொடர் கண்காணிப்பு இல்லாதது சிறந்த நடைமுறை இல்லை என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
வழக்கமான பிரசவ முயற்சி தோல்வி அடைந்ததால் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறந்த சிசுவின் கழுத்தில் தொப்புள் கொடி மூன்று முறை சுற்றியிருந்தது.
அவை அகற்றப்பட்டு பிள்ளைக்கு செயற்கை உயிர்வாயு சிகிச்சை வழங்கப்பட்டது. பின்னர் சுவாசக்குழாயை அழுத்தி சிகிச்சை வழங்கப்பட்டது.
பிறகு, சிசுவின் உயிர் நாடி மேம்பட்டது. அது அசைந்து அழுதது. ஆனால் பார்வையாளர் அறைக்கு மாற்றப்பட்ட பிறகு சிசுவின் நிலைமை மோசமாகி பின்னர் இறந்தது.

