சிங்கப்பூரில் சட்டவிரோதமாக 10 ஆண்டுகளுக்கு மேல் தங்கிய இரு பெண்கள்

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக 10 ஆண்டுகளுக்கு மேல் தங்கிய இரு பெண்கள்

2 mins read
3cedae24-cc97-4066-8154-e8b1665b5aaa
-

சிங்­கப்­பூ­ரில் அனு­ம­தி­யின்றி சட்­ட­வி­ரோ­த­மாக பத்து ஆண்டு களுக்கு மேல் தங்­கி­யி­ருந்த இரு பெண்­க­ளுக்கு நேற்று ஆறு மாதச் சிறைத் தண்­ட­னை­யு­டன் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சீனா­வைச் சேர்ந்த இருவரும் எம்பி­ளாய்­மெண்ட் பாஸ் ரத்து செய்த பிற­கும் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் தங்­கி­யி­ருந்­த­னர்.

வெய் ஜியான்­சின், 56, சென் மெய், 44 ஆகிய இரு­வ­ரும் குடி­நு­ழை­வுச் சட்­டத்தை மீறிய குற்­றச்­சாட்டை நேற்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் ஒப்­புக்கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு தலா 2,000 வெள்ளி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இம்­மா­தம் 9ஆம் தேதி பிடோக் நார்த் ரோட்­டில் உள்ள வீவக வீட்­டில் இரு­வ­ரை­யும் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணைய அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

அப்­போது, சிங்­கப்­பூ­ரில் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­க­வில்லை என்­ப­தற்­கான ஆதா­ரத்தை அவர்­க­ளால் காட்ட முடி­ய­வில்லை.

வெய்க்கு 2007 ஏப்­ரல் 18ஆம் தேதி முதல் ஓராண்டு வேலை செய்ய எம்பி­ளாய்­மெண்ட் பாஸ் வழங்­கப்­பட்­டது. சென்­னுக்கு இரண்டு ஆண்­டு­கள் பணி­யாற்ற 2009 ஜூலை 17ஆம் தேதி­யி­லி­ருந்து எம்ப்­ளாய்­மெண்ட் பாஸ் கொடுக்­கப்­பட்­டது. வெய்­யின் வேலை அனு மதிச் சீட்டு, 2007 செப்­டம்­பர் 27ஆம் தேதி­யன்­றும் சென்­னின் வேலை அனு­ம­திச் சீட்டை 2009 ஆகஸ்ட் 5ஆம் தேதி­யன்­றும் மனி­த­வள அமைச்சு ரத்து செய்­தது.

ஆனால் அதை­யும் மீறி வெய் 15 ஆண்டு, மூன்று மாதம், 13 நாட்­களும் சென் 13 ஆண்டு, ஐந்து மாதங்­கள், நான்கு நாட்­களும் சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யி­ருந்­த­னர்.

அவர்­க­ளு­டைய அனு­ம­திச் சீட்டு ரத்து செய்­யப்­பட்­ட­தற் கான கார­ணம் நீதி­மன்ற ஆவ ணங்­களில் தெரி­விக்­கப்­பட வில்லை.