'பெற்றோரிடம் வாங்கிய கடனை அடைக்க கார் தேவை'

1 mins read
d336803a-fde1-444b-a115-5a41132770ee
-

காவ­லர் ஒரு­வரை இழுத்­துச்­சென்ற மச­ரட்டி கார் ஓட்­டு­ந­ரின் காரை ஏன் பறி­மு­தல் செய்­யக் கூடாது என்­பது தொடர்­பான வழக்கு பிப்­ர­வரி 27ஆம் தேதி ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

2017ஆம் ஆண்டு நடந்த சம்­ப­வத்­தில் லீ செங் யான், காவல் அதி­காரி ஒரு­வரை தனது மச­ரட்டி காரால் 100 மீட்­ட­ருக்கு மேல் இழுத்­துச் சென்­றார்.

இந்த வழக்­கில் லீக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கார் ஓட்­ட­வும் அவ­ருக்­குத் தடை விதிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் சாலைச் சட்டப்­படி அவ­ரது ஆடம்­பரக் காரை பறி­மு­தல் செய்­வ­தற்­கான வழக்கு நடை­பெற்று வரு­கிறது.

நேற்று அவ­ரது சகோ­த­ரி­யி­டம் விசா­ரணை நடை­பெற்­றது.

அப்­போது, ஜப்­பா­னில் படிக்­கும் லீயின் இரு மகள்­க­ளுக்கு பெற்­றோர் உதவி வரு­வ­தாக சகோ­தரி தெரி­வித்­தார்.

மேலும் சட்­டச் செலவுகளுக்­காக பெரு­ம­ளவு பணத்தை பெற்­றோ­ரி­ட­மி­ருந்து லீ கடன் வாங்கி உள்­ளார் என்­றும் தனது தாயார் நகை­களை அடகு வைத்து பணம் கொடுத்த­தா­க­வும் அவர் சொன்­னார். பெற்­றோ­ரி­டம் கடனை அடைப்­ப­தற்­காக அவர்களிடம் காரை லீ அடமானம் வைத்திருப்பதாகவும் அவர் கூறி­னார். விசா­ரணை தொடர்­கிறது.