ஜூரோங் தீவுக்கு சூரிய ஒளியி லிருந்து பெறும் மின்சாரத்தை பன்மடங்கு பெருக்க ஜேடிசி பெரும் திட்டத்தை வகுத்துள்ளது.
அதன்படி அறுபது ஹெக்டர் பரப்பளவுள்ள தீவின் காலியிடத்திலும் அதிகமான கூரைகளிலும் சூரிய சக்தித் தகடுகளை அது பொருத்தவிருக்கிறது.
இதனால் சூரிய சக்தி மின்சார உற்பத்தி எட்டு மடங்கு அதி கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது, ஜூரோங்கில் சுமார் 12.3 மெகாவாட் முதல் 103.2 மெகாவாட் வரை சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இது, 24,300 நான்கறை வீவக வீடுகளுக்கு ஓராண்டுக்குத் தேவையான மின்சாரத்திற்கு ஈடாகும் என்று ஜேடிசி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தப் புள்ளியின்கீழ் 84 காற்பந்து திடல் அளவுள்ள தற்காலிக காலியிடத்தில் மட்டுமின்றி ஜூரோங் தீவில் உள்ள ஜூரோங் ராக் கேவர்ன்ஸ், ஜூரோங் தீவு சோதனைச் சாவடி உள்ளிட்ட ஐந்து கட்டடங்களின் கூரைகளிலும் சூரியத் தகடுகள் பொருத்தப்படவிருக்கின்றன.
ஜூரோங் தீவை சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காத எரிபொருள், ரசாயனப் பூங்கா இடமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது இடம்பெறுகிறது.
இந்தத் திட்டம் பூர்த்தியனால் ஜூரோங் தீவில் நிறுவப்படும் சூரியத் தகடுகள் சிங்கப்பூரின் 2030ஆம் ஆண்டு சூரிய சக்தியின் இலக்கில் ஐந்து விழுக்காட்டை நிறைவு செய்யும்.
2030ஆம் ஆண்டுக்குள் சுமார் இரண்டு கெகாவாட் மின் சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சூரியத் தகடுகள் குடியரசில் பொருத்தப்பட்டிருக்கும்.
உலகை வெப்பமடையச் செய்யும் படிம எரிபொருளிலிருந்து விலகி சுற்றுப்புறத்துக்கு கேடு விளைவிக்காத எரிபொருளை உற்பத்தி செய்ய விரும்பும் சிங்கப் பூரின் திட்டத்தில் இது முக்கிய தூணாக இருக்கும்.
சிங்கப்பூரில் காற்றின் வேகம் குறைவு. மேலும் பெரிய துறைமுகங்கள் அமைந்துள்ளதால் அலையாற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கான வாய்ப்பும் வரம்புக்கு உட்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சூரியத் தகடு கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளமாக சிங்கப்பூர் கருதுகிறது.
சூரியத் தகடுகள் பொருத்தும் அளவுக்கு சிங்கப்பூரின் நிலப் பரப்பும் பெரிய அளவில் இல்லாதது மற்றொரு குறை யாகும்.
இதனைச் சமாளிக்க ஜேடிசி தனது 'சோலார்ரூஃப்', 'சோலார்லேண்ட்' திட்டங்களின் மூலம் 14,000 வர்த்தகங்கள் செயல்படும் கட்டங்களின் கூரைகளில் சூரியத் தகடுகளை அமைக்கத் திட்ட மிட்டுள்ளது.

