உணவு விநியோக நிறுவனமான சொன்னாமேராவின் சரக்குக் கிடங்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்த மகேஸ்வரன் எம். ரத்னசபாபதி $6,800 லஞ்சம்
வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பணத்தை அவர் மனிதவளச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் இயக்குநரான 26 வயது ஹேமசுதன் நாயர் அச்சுதநாயரிடமிருந்து பெற்றுக்கொண்டதாக அரசாங்க வழக்
கறிஞர்கள் தெரிவித்தனர்.
சொன்னாமேரா நிறுவனத்துக்குத் தேவையான ஊழியர்களை ஹேமசுதனின் நிறுவனத்திட
மிருந்து பெற மகேஸ்வரனுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.
ஹேமசுதனிடமிருந்து பெற்றுக்கொண்ட லஞ்சப் பணத்தின் ஒரு பகுதியை சக ஊழியர் ரெனிதா முரளிதரனிடம் மகேஸ்வரன் தந்தார். ரெனிதாவிடம் அவர் $3,400 கொடுத்தார்.
27 வயது மகேஸ்வரன்,
31 வயது ரெனிதா ஆகியோர் மீது தலா மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவற்றை அவர்கள் இருவரும் நேற்று ஒப்புக்கொண்டனர்.
இருவருக்கும் தலா $24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
சொன்னாமேரா நிறுவனத்
திடம் மகேஸ்வரன் $2,600 திருப்பிக் கொடுத்துவிட்டார். அவருக்குக் கூடுதலாக $829 அபராதம் விதிக்கப்பட்டது. தாம் வேலை பார்த்த நிறுவனத்திடம் ரெனிதா பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை. அவருக்கு கூடுதலாக $3,379 அபராதம் விதிக்கப்பட்டது.
ஹேமசுதன், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்புத் திட்டம் நடை
முறைப்படுத்தப்பட்டதற்கு முன்பு மலேசியாவுக்குச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் இன்னும் பிடிபடவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.

