தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள அல் அமின் பாலர் பள்ளியின் தலைமையாசிரியர் பதவிக்குப் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பம் செய்த 43 வயது பெண்ணுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
'ஜிசிஇ' சாதாரணநிலை தேர்வை இருமுறை எழுதியும் ஆங்கிலத் தேர்வில் ஏஞ்சலா சோங் அன்சி தேர்ச்சி பெறவில்லை. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று இணையம் மூலம் பாலர் மேம்பாட்டு முகவைக்கு போலி ஆவணங்களை அவர் அனுப்பி வைத்தார்.
அல் அமின் பாலர் பள்ளி
யிடம் அவர் போலி 'ஜிசிஇ' சாதாரணநிலை தேர்வுச்
சான்றிதழைச் சமர்ப்பித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானவைதானா என்பதை உறுதி செய்ய முகவை சோதனை நடத்தியதில் சோங்கின் நேர்மையற்ற செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று காவல்துறையிடம் முகவையின் மேலாளர் ஒருவர் புகார் செய்தார்.
போலி ஆவணங்கள் சமர்ப்பித்த குற்றச்சாட்டுகளை சோங் ஒப்புக்கொண்டார்.

