வீட்டு உரிமையாளர்களுக்கு இரட்டை அடி: ஹெங்

வீட்டு உரிமையாளர்களுக்கு இரட்டை அடி: ஹெங்

2 mins read
9eecf0cc-2ea7-4b8d-900a-c7cbec8f4365
-

வீட்டு விலை ஏறி­விட்­டது. வட்டி விகி­தம் கூடி­விட்­டது. இத­னால் வீட்டு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு இரண்டு பக்­க­மும் அடி என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

'ரேடாஸ்' எனும் சிங்­கப்­பூர் சொத்து மேம்­பாட்­டா­ளர் சங்க நிகழ்ச்­சி­யில் பேசிய அவர், சொத்­துச் சந்­தையை மட்­டுப்படுத்­து­வ­தற்­காக அர­சாங்­கம் இரண்டு சுற்று நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­ததை சுட்­டிக் காட்­டி­னார்.

வரு­மா­னத்­துக்­கும் இதர அடிப்­படை அம்­சங்­க­ளுக்­கும் தொடர்பு இல்­லாத வீட்டு விலை உயர்வை தடுக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது என்று குறிப்­பிட்ட துணைப் பிர­த­மர், உல­க­ளா­விய நிச்­ச­ய­மற்ற நிலை­யி­லும் அதிக வீடு­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டா­லும் வீட்டு விலை மித­மிஞ்­சிய அள­வில் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

தனி­யார், மறு­விற்­பனை வீடு ­க­ளுக்­கான தேவை வலு­வாக இருப்­ப­தையே இது காட்­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

"வீட்­டுக் கடனை வாங்­கி­ய­வர்­கள் மாதந்­தோ­றும் அதி­கம் கட்ட வேண்­டிய சூழ்­நி­லை­யில் உள்­ளது. அட­மான வட்டி விகி­தம் குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­துள்­ளது," என்­றார் அவர்.

அட­மான வட்­டி­வி­கித ஏற்ற இறக்­கத்தை அளக்க பர­வ­லா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் சோரா எனும் குறி­யீடு கடந்த ஆண்டு 0.2 விழுக்­காட்­டி­லி­ருந்து 3 விழுக்­காட்­டுக்கு உயர்ந்­தது.

வட்டி விகிதம், நிலை பெறு­ வ­தற்கு முன்பு அடுத்து வரும் மாதங்­களில் மேலும் அதி­க­ரிக்­கக் கூடும் என்று அவர் எச்­ச­ரித்­தார்.

இருந்தாலும் வீட்டு விலை உயர்வு நான்­கா­வது காலாண்­டில் மெது­வ­டைந்­துள்­ளது.

வீட்­டுப் பரி­வர்த்­த­னை­கள் குறைந்­துள்­ளன. அதே வேளை யில் பொது குடியிருப்பு வீடுகளின் விநியோகம் அதிகரித்துள்ளது.

கடந்த 2022ல் 23,000 வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டன.

அதே ஆண்டில் அரசாங்க நில விற்பனையின்கீழ் 6,300 தனியார் வீடுகளும் விற்பனைக்கு வந்தன.

இவ்வாண்டு முதல் பாதியில் மேலும் 4,100 வீடுகள் விற் பனைக்கு வரவிருக்கின்றன.

இதற்கிடையே ரேடாஸின் புதிய தலைவரான டான் சுவீ இயோவ், தனது முதல் உரையில் சொத்து நிறுவனங்கள் உட்பட பல வர்த்தகங்களுக்கு கடந்த சில ஆண்டுகள் சவாலாக இருந்ததாகத் தெரிவித்தார்.

அதிகரிக்கும் வட்டி விகிதம், கூடி வரும் பணவீக்கம், உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள இடையூறு கள் ஆகியவற்றால் உலகளாவிய வளர்ச்சி மெதுவடைந்து வரு வதாக அவர் கூறினார்.