பணிப்பெண்களை துன்புறுத்திய வழக்கு; மாதுக்குச் சிறை

பணிப்பெண்களை துன்புறுத்திய வழக்கு; மாதுக்குச் சிறை

2 mins read
66325826-13e5-471f-90e8-075a50292ecf
-
Google News Preferred Icon

செந்­தோசா கோவில் உள்ள தனது பார­டைஸ் ஹைலண்ட் வீட்­டில் இரண்டு பணிப்­பெண் களைத் துன்­பு­றுத்­திய வழக்­கில் 58 மாதுக்கு பத்து மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஆனால் தண்­ட­னையை எதிர்த்து மேல்­மு­றை­யீடு செய்­யப் போவ­தாக மாது கூறி­யுள்­ளார்.

டான் லீ ஹுன், 58, தனக்கு காலுறை அணிவித்த பணிப்­பெண்ணை, தவ­றாக அணிவித்த தாகக் கூறி கோபத்­தில் எட்டி உதைத்­துள்­ளார். மற்­றொரு பெண்ணை அவர் கிள்­ளி­யி­ருக்­கி­றார். செல்வி ஜோன் லோஸ­ரெஸ் லிஸார்டோ, செல்வி ஜெனி­ஃபர் வேக­ஃபி­ரியா அரங்­கோட் ஆகிய இரு பணிப்­பெண்­க­ளைத் தாக்­கி­ய­தா­கக் கூறப்­படும் எட்டு குற்றச்­சாட்­டு­க­ளி­லும் நொவினா மெடி­கல் சென்­ட­ரின் இயக்கு நரா­க­வும் செய­லா­ள­ரா­க­வும் இருந்த டான் மேல்­மு­றை­யீடு கோரி­யுள்­ளார்.

மாவட்ட நீதி­பதி சலினா இஷாக், லிஸார்­டோ­வுக்கு 2,500 வெள்­ளி­யும் செல்வி அரங்­கோட்­டுக்கு 5,100 வெள்­ளி­யும் இழப்­பீ­டாக வழங்க டானுக்கு உத்­த­ர­விட்­டார்.

சென்ற டிசம்­ப­ரில் தாக்­கப்­பட்ட ஏழு சம்­ப­வங்­களில் டான் குற்­ற­வாளி எனத் தீர்ப்பு அளித்த நீதி­பதி, எல்லா பணிப்­பெண்­களும் கௌர­வத்­து­ட­னும் மரி­யா­தை­யு­ட­னும் நடத்­தப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

பாதிக்கப்­பட்­ட­வர்­கள், அடைந்த துன்­பத்­துக்­கா­க­வும் வலிக்­கா­க­வும் இழப்­பீடு வழங்­கப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

இருந்­தா­லும் செல்வி லிஸார்­டோ­வு­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டி­லி­ருந்து டானை நீதி­பதி விடு­வித்­தார். இத­னால் அவர் மீது மீண்­டும் அதே குற்­றத்தை சுமத்த முடி­யாது.

ஆனால் அர­சுத் தரப்பு வழக்­கறி­ஞர்­கள், டான் குற்­றச்­சாட்­டி­ல் இ­ருந்து விடு­விக்­கப்­பட்­ட­தற்கு எதி­ர்ப்பு தெரிவித்துள்ளனர்.

துணை அர­சுத் தரப்பு வழக் ­க­றி­ஞர்­க­ளான கும­ரே­சன் கோகு­ல­பா­லன், இங் ஜுன் சோங் ஆகி­யோர் சமர்­பித்த ஆவ­ணங்­களில் டானின் கண­வர் சிம் குவான் ஹுவாட் பணிப்­பெண்­களை வேலைக்கு அமர்த்­தி­யா­கத் தெரி கிறது.

2018 செப்­டம்­ப­ரில் நடந்த ஐந்து சம்­ப­வங்­களில் செல்வி அரங்­கோட்­டின் வயிறு, மார்பு, கால்­களில் டான் கிள்­ளி­யி­ருக்­கி­றார். லிஸார்டோவை அவர் எட்டி உதைத்துள்ளார்.

"குற்­ற­வாளி தாக்­கி­ய­தால் பணிப்­பெண்­ணுக்கு வலி ஏற்­பட்­டுள்­ளது. குற்­ற­வா­ளிக்கு குனிந்து காலுறை அணிவித்த­போது அவ­ரது தலை­யி­லும் தாக்­கப்­பட்­டுள்­ளார்," என்று நீதி­பதி குறிப்­பிட்­டார். "வலிக்­கும் அள­வுக்கு செல்வி லிஸார்டோ எட்டி உதைக்­கப்­பட்­டுள்­ளார். ஐந்து நாள்­க­ளுக்­குப் பிற­கும் அவ­ருக்கு வலி இருந்­தது," என்று அர­சுத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் கூறி­னர்.

காவல்­து­றைக்கு யார் தக­வல் கொடுத்­தார்­கள் என்­பது நீதி­மன்ற ஆவ­ணங்­களில் தெரி விக்கப்படவில்லை.

டானின் வீட்­டுக்கு வந்த காவல்­து­றை­யி­னர் அறிக்­கையை மட்­டும் பெற்­றுச் சென்­ற­னர்.

"லிஸார்­டாவோ, அரங்­கோட்டோ காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­விக்­க­வில்லை. ஏன் காவல்­து­றை­யி­னர் வீட்­டுக்கு வந்­த­னர் என்­ப­தும் அவர்­க­ளுக்­குத் தெரி­யாது," என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் குறிப்பிட்டனர்.

டான் அனைத்­துக் குற்­றச்­சாட்டுக­ளை­யும் மறுத்­துள்­ளார்.

எந்­தப் பணிப்­பெண்­ணை­யும் தாக்­கி­யதோ, துன்­பு­றுத்­தி­யதோ இல்லை என்று அவர் கூறி­யுள்­ளார். டானை $15,000 பிணை­யில் விடு­விக்க நீதி­மன்­றம் உத்­த­ர­விட்டுள்­ளது.