போதைப்பொருளை அதிகமாக கடத்திவர கும்பல்கள் முயற்சி கொவிட்-19க்குப் பிறகு கடத்தல்காரர்களின் செயல்பாடு மாறி இருப்பதாக தகவல்

போதைப்பொருளை அதிகமாக கடத்திவர கும்பல்கள் முயற்சி கொவிட்-19க்குப் பிறகு கடத்தல்காரர்களின் செயல்பாடு மாறி இருப்பதாக தகவல்

2 mins read
acea88b5-8857-4f26-9ac9-6cbde83d07fc
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்று போதைப்­பொ­ருள் கடத்­தல் பாணியை மாற்றி இருக்­கிறது. அதி­க­ள­வில் போதைப்­பொருளைக் கடத்தி வரு­வதில் இப்­போது கடத்­தல்­கா­ரர்­கள் ஆர்­வம் காட்­டு­கி­றார்­கள்.

சென்ற ஆண்டு மே, செப்டம்­பர் மாதங்­களில் 18 கிலோ­கிராம் ஹெரா­யின், 13 கிலோ­கிராம் போதைப்­பொ­ருள் கைப்­பற்­றப்­பட்ட­தாக மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரி­வின் மூலம் தெரி­யவரு­கிறது.

சிங்­கப்­பூ­ருக்கு போதைப்­பொ­ருளை விநி­யோ­கிப்­ப­தில் கடத்­தல்­பேர்­வ­ழி­கள் ஆர்­வ­மாக இருக்­கி­றார்­கள் என்று உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் இணைப் பேரா­சி­ரி­யர் முகம்­மது ஃபைசல் இப்­ரா­ஹிம் தெரி­வித்­தார்.

போதைப்­பொ­ரு­ளைத் தவறாகப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ரான ஆலோ­ச­னைக் கட்­ட­மைப்­புத் (A3) தொண்­டூ­ழி­யர்­கள், பங்­காளி­கள் கலந்­து­கொண்ட பாராட்டு விருந்து நிகழ்ச்­சி­யில் அமைச்­சர் பேசி­னார்.

இக்­கட்­ட­மைப்­பின் 800க்­கும் மேற்­பட்ட­தொண்­டூ­ழி­யர்­க­ளின் சேவை­யை­யும் அர்ப்­ப­ணிப்­பை­யும் அக்கறையையும் அங்­கீ­கரிக்­கும் முறை­யில் அந்நிகழ்ச்சி நடந்தது.

சட்­டத்தை ஏமாற்றி, பொது­மக்­க­ளை­யும் அவர்­க­ளது குடும்­பங்­க­ளை­யும் கெடுத்து தாங்கள் சுக­மாக வாழ தொடர்ந்து கடத்­தல்­கா­ரர்­கள் புதுப்­புது வழி­களைக் கண்­டு­பி­டிக்­கி­றார்­கள் என்று அமைச்சர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் மிக­வும் அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் போதைப்­பொ­ருள் ஐஸ் மாத்­தி­ரை­யாக இருக்­கிறது.

2021ல் போதைப்­பொ­ரு­ளைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தி­ய­தன் பேரில் கைதா­ன­வர்­களில் 60 விழுக்­காட்­டி­னர் இந்த மாத்­திரை­யைப் பயன்­ப­டுத்­தி­னார்­கள் என்று இணைப் பேரா­சி­ரி­யர் தெரி­வித்­தார். இந்த வட்­டா­ரத்­தில் இது அதி­கம் கிடைக்­கிறது என்­று இணைப் பேராசிரியர் கூறினார்.

சிங்­கப்­பூர் முக்­கி­ய­மான போக்கு­வ­ரத்து மைய­மாக இருக்­கிறது. இடை­வழி இட­மாக பல கும்­பல்­களும் சிங்­கப்­பூரை பயன்­படுத்த முயல்­கின்­றன என்­றார் அவர்.

2021ல் ஒரு பில்­லி­ய­னுக்­கும் அதிக ஐஸ் மாத்­தி­ரை­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இந்த வட்­டா­ரத்­தில் கிட்­டத்­தட்ட 172 டன் ஐஸ் மாத்­தி­ரை­கள் பிடி­பட்­டன. போதைப்­பொ­ருள் பய­னீடு, விற்­பனை, விநியோ­கத்­தில் பதின்ம வய­தி­னர் ஈடு­ப­டு­வது கவலை தரு­கிறது என்­றா­ர­வர்.

ஹாங்­காங்­கின் போதைப்­பொருள் தொடர்­பான தலை­மைத்­துவ பயி­ல­கம் என்ற அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­கள் குழு, ஹாங் காங்­கில் போதைப்­பொ­ருள் புழக்­கத்­தைத் தவிர்க்க மாண­வர்­கள் எடுத்­து­வ­ரும் முயற்­சியை விளக்கி கூறிய அங்­க­மும் நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்­றது.

ஊட­கத்­தின் வாயி­லாக பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்­வூட்­டும் விளக்­கக்­காட்­சியை போதைப் புழக்­கத்­திற்கு எதி­ரான தேசிய மன்­றம் நேற்­றைய நிகழ்ச்­சி­யில் அரங்­கேற்­றி­யது.

A3 கட்­ட­மைப்­பில் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தொண்­டூ­ழி­ய­ராக சேவை­யாற்­றி­வ­ரும் வெங்­க­டேஷ் நலமதி, 34, போதைப்­பொ­ரு­ளால் பாதிக்­கப்­பட்ட தன் நண்­பர் ஒரு வரைப்­போல் வேறு யாரும் பாதிக்­கப்­படக்­கூ­டாது என்­ப­தால் தான் இந்த தொண்டை ஆற்­றி­ வருவதா­கக் கூறி­னார்.