தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஜயன்ட்', 'அங் மோ' பேரங்காடிகளில் 'சிடிசி' பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்

1 mins read
1066a6b2-2748-4eee-8962-b05c818539f4
-

சிங்­கப்­பூ­ரர்­கள் இனி சமூக மேம்­பாட்டு மன்­றப் (சிடிசி) பற்­றுச்­சீட்­டு­களை 'ஜயன்ட்', 'அங் மோ' ஆகிய பேரங்­கா­டி­களில் பயன்­படுத்­த­லாம். நேற்று இது நடப்­புக்கு வந்­தது.

தென்­மேற்கு மாவட்ட மேயர் லோ யென் லிங் இந்­தத் தக­வலை ஃபேஸ்புக்­கில் நேற்று பதி­விட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள 55 'ஜயன்ட்' கிளை­கள், 12 'அங் மோ' கிளை­கள் ஆகி­ய­வற்­றில் இப்­பற்­றுச்­சீட்­டு­களை பயன்­ப­டுத்­த­லாம் என்று சமூக மேம்­பாட்டு மன்­றப் பற்­றுச்­சீட்­டு­க­ளுக்­கான இணை­யத்­த­ளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்­கெ­னவே ஃபேர்பி­ரைஸ், ஷெங் சியோங், பிரைம், ஹாவ் மார்ட், யூ ஸ்டார்ஸ் ஆகிய ஐந்து பேரங்­கா­டி­களில் 'சிடிசி' பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஏழு பேரங்­கா­டி­க­ளின் கிளை­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 360க்கு மேற்­பட்ட கடை­க­ளி­லும் 20,600க்கு மேற்­பட்ட குடி­யி­ருப்­புப் பேட்­டைக் கடை­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் இப்­பற்­றுச்­சீட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­திப் பொருள்­களை வாங்­க­லாம்.

இந்த ஆண்­டுக்­கான $300 மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டு­கள் சென்ற மாதம் 3ஆம் தேதி வழங்­கப்­பட்­டன. இவற்றை 90 விழுக்­காட்டு சிங்­கப்­பூர் குடும்­பங்­கள் பெற்­றுக்­கொண்­ட­தாக மேயர் லோ தெரி­வித்­தார்.