தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய இளையர்

3 mins read
397885be-0e63-4da4-b51a-158df007755c
-

முக­மது இர்­ஃபான் டன்­யால் முக­மது நூர் எனும் 18 வயது இளை­யர் உள்­நாட்­டுப் பாது­காப்­புச் சட்­டத்­தின்­கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை நேற்று அறி­வித்­தது.

உயர்­நி­லைப் பள்­ளிப் படிப்பை முடித்த அந்த இளை­யர் இணை­யத்­தில் 'ஐஎஸ்' பயங்­க­ர­வாத அமைப்­பின் அறிக்­கை­க­ளைப் படித்து தீவி­ர­வா­தச் சித்­தாந்­தத்­தின்­பால் ஈர்க்­கப்­பட்­டார். அதன் பிறகு சிங்­கப்­பூ­ரில் தாக்­கு­தல்­களை நடத்­த­வும் திட்­ட­மிட்­டார்.

இர்­ஃபான் 2020ஆம் ஆண்டு, வெளி­நாட்டு போத­கர்­க­ளின் யூடி­யூப் காணொ­ளி­க­ளைப் பார்த்த பிறகு தீவி­ர­வா­தப் பாதை­யில் பய­ணம் செய்­யத் தொடங்­கி­னார்.

சமூக ஊட­கங்­களில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கேற்­ற­தன்­வழி 'ஐஎஸ்' பயங்­க­ர­வாத அமைப்­பின் பிர­சா­ரங்­களைத் தெரிந்­து­கொண்­டார்.

பின்­னர் 2021ல் தன்னை 'ஐஎஸ்' போரா­ளி­யா­கச் சித்­தி­ரிக்­கும் வகை­யில் புகைப்­ப­டங்­களை எடுத்­துக்­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் இஸ்லாமிய கலிஃபேட் அரசை நிறுவி, முஸ்­லிம்­களை அதில் சேர்க்­க­வும் திட்­ட­மிட்­டார்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, கோனித் தீவிற்­குச் சென்ற இர்­ஃபான், அல்-காய்தா அமைப்­பு­டன் தொடர்­பு­டைய சிரியா நாட்டு பயங்­க­ர­வா­தக் குழு­வின் கொடியை மாதி­ரி­யா­கக் கொண்டு தானே தயா­ரித்த கொடி ஒன்றை அங்கு நாட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரின் தேசிய தினத்­தில் சொந்­த­மாக கலிஃபேட்டைத் தொடங்­கு­வது அவ­ரது நோக்­கம். அக்கொடியின் படத்தை சமூக ஊட­கங்­களில் பதி­விட்டு, 'இஸ்­லா­மிக் ஸ்டேட் ஆஃப் சிங்­க­ஃபூரா' எனும் அந்த அமைப்­பில் சேரும்­படி கோரிக்கை விடுத்­தார்.

பின்­னர் 'நம்­பிக்கை அற்­ற­வர்­க­ளைக்' கொல்­லும் திட்­டத்­து­டன் கத்தி ஒன்றை வாங்­கி­னார் இர்­ஃபான்.

முஸ்­லிம் அல்­லா­தோர், ஷியா முஸ்­லிம்­கள், சூஃபி முஸ்­லிம்­கள் ஆகி­யோரை 'நம்­பிக்கை அற்­ற­வர்­கள்' என்று அவர் வகைப்­படுத்­தி­யுள்­ளார்.

இர்­ஃபான் கைது செய்­யப்­பட்­ட­போது இதே­போல் வேறு இரண்டு தாக்­கு­தல் திட்­டங்­க­ளுக்­கும் அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார்.

ஆனால் இவற்றை எப்­போது நடத்­து­வது என்று அவர் முடி­வு­செய்­தி­ருக்­க­வில்லை.

அக்­டோ­பர் 2022ல் நைஜீ­ரியா சென்று மேற்கு ஆப்­பி­ரிக்­கா­வில் இயங்­கும் 'ஐஎஸ்' பிரி­வில் சேர முடி­வெ­டுத்­தார். அது சாத்­தி­ய­மா­கா­விட்­டால் ஈராக், சிரியா, பிலிப்­பீன்­சின் மராவி ஆகிய இடங்­களில் ஏதா­வது ஓரி­டத்­துக்­குச் சென்று அங்கு போரா­ளி­களு­டன் சேர விரும்­பி­னார்.

சென்ற ஆண்டு நவம்­பர் 12, 13 ஆகிய தேதி­களில் தேசிய மாண­வர் படை­யின் சீரு­டையை அணிந்­து­கொண்டு கோனித் தீவில் 'ஐஎஸ்' அமைப்­புக்­கான உறு­தி­மொழி எடுப்­ப­து­போல் காணொ­ளி­யில் பதி­வு­செய்­யத் திட்­ட­மிட்­டார்.

சிங்­கப்­பூ­ரில் தாக்­கு­தல் நடத்த 100 முதல் 500 போரா­ளி­க­ளைத் தயார்ப்­ப­டுத்­து­வ­தும் இர்­ஃபா­னின் திட்­டம். தேசிய மாண­வர் படைத் தலை­மை­ய­கத்­தில் பெரிய அள­வில் தாக்­கு­தல் நடத்த அவர் திட்­ட­மிட்­டார்.

கார் வெடி­குண்டு மூலம் தாக்­கு­தல் நடத்­து­வ­தும் அவ­ரது சதித்­திட்­டங்­களில் அடங்­கும். இதன் தொடர்­பில் இணை­யத்­தில் அவர் தக­வல் சேக­ரித்­தார்.

ஆனால் சென்ற ஆண்டு நவம்­பர் மாதத் தொடக்­கத்­தில், கோனித் தீவில் காணொளி எடுப்­ப­தற்கு முன்­பா­கவே இர்­ஃபான் கைது செய்­யப்­பட்­டார். அவர் உட­ன­டிப் பாது­காப்பு மிரட்­ட­லா­கக் கரு­தப்­பட்­ட­தாக உள்­நாட்­டுப் பாது­காப்­புத் துறை கூறி­யது.

கைது செய்­யப்­பட்­ட­போது அவ­ரது தாக்­கு­தல் திட்­டங்­கள் சிந்­தனை அள­வி­லேயே இருந்­த­தா­கக் கூறப்­படுகிறது.

இது­வரை நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­யில் இர்­ஃபான் தனித்­துச் செயல்­பட்­ட­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. அவர் வேறு யாரை­யும் தீவி­ர­வா­தச் சித்­தாந்­தத்­தின்­பால் ஈர்க்­க­வில்லை.

சதித்­திட்­டத்­தில் பங்­கு­கொள்ள ஆள்­சேர்ப்­பி­லும் வெற்றி­பெ­ற­வில்லை.

இர்­ஃபா­னின் சதித்­திட்­டங்­கள் குறித்தோ அவர் வெளி­நாடு சென்று ஆயு­த­மேந்­திப் போரிட முயற்சி செய்­தது குறித்தோ குடும்­பத்­தி­னர் யாரும் அறிந்­தி­ருக்­க­வில்லை.