எஸ்பிஎச் மீடியா செய்தித்தாள் விற்பனை: நாடாளுமன்றக் கூட்டத்தில் கவனம் பெறும்

எஸ்பிஎச் மீடியா செய்தித்தாள் விற்பனை: நாடாளுமன்றக் கூட்டத்தில் கவனம் பெறும்

2 mins read
a9b30f8b-d220-4cf0-a158-d3bb66cad72e
-

எஸ்­பி­எச் மீடி­யா­வில் செய்­தித்­தாள் விற்­பனை எண்­ணிக்கை கூட்­டிக் காட்­டப்­பட்ட விவ­கா­ரம் வரும் திங்­கட்­கி­ழமை 6ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் கவ­னம் பெற­வுள்­ளது. நாடா­ளு­மன்­றத்­தில் அதன் தொடர்­பில் 17 கேள்­வி­கள் களை எழுப்­பப்­படும்.

எஸ்­பி­எச் மீடி­யா­வில் ஐந்­தாண்­டு­களில் $900 மில்­லி­யனை முத­லீடு செய்­யும் முடிவை அந்த விவ­கா­ரத்­தால் அர­சாங்­கம் மாற்­றிக்­கொள்­ளுமா என்­ப­தில் 13 கேள்­வி­கள் கவ­னம் செலுத்­தும்.

எஸ்­பி­எச் மீடியா 2020 செப்­டம்­பர் முதல் 2022 மார்ச் வரை­யி­லான அதன் செய்­தித்­தாள் விற்­பனை எண்­ணிக்­கையை மறு­ஆய்வு செய்­த­போது, சில செய்­தித்­தாள்­க­ளின் அன்­றாட சரா­சரி விற்­பனை எண்­ணிக்கை 85,000 பிர­தி­கள் முதல் 95,000 பிர­தி­கள் வரை கூட்­டிக் காட்­டப்­பட்­டது தெரி­ய­வந்­தது.

அந்த விவ­கா­ரம் வெளி­வர ஏன் இவ்­வ­ளவு கால­மா­னது, அத­னால் எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட் அற­நி­று­வ­னத்­தின்­மீது பொது­மக்­க­ளுக்கு உள்ள நம்­பிக்கை பாதிக்­கப்­ப­டுமா, அது குறித்து திட்­ட­மி­டப்­படும் நட­வ­டிக்­கை­கள் ஆகி­யவை பற்­றி­யும் கேள்­வி­கள் முன்­வைக்­கப்­படும்.

மேலும், வரும் திங்­க­ளன்று அதி­பர் தேர்­தல் சட்­டத்­தி­ருத்­தங்­கள் குறித்த இரண்டு மசோ­தாக்­களை பிர­த­மர் லீ சியன் லூங் முன்­வைப்­பார். அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பின் பத­விக் காலம் நிறை­வ­டைய உள்ள நிலை­யில் இவ்­வாண்டு செப்­டம்­ப­ருக்­குள் அதி­பர் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும்.

அத்­து­டன், அர­சாங்க வீடுகள் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் உள்­ள­னவா என்­ப­தும் நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­படும். அதன் தொடர்­பில் இரண்டு வெவ்­வேறு தீர்­மா­னங்­கள் மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்­சி­யைச் சேர்ந்த தொகு­தி­யில்லா நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் லியோங் மன் வாய், ஹேசல் புவா இரு­வ­ரும் அவற்­றில் ஒன்றை முன்­வைத்­துள்­ள­னர்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ மற்றொரு தீர்­ மா­னத்தை முன்­மொ­ழிந்­துள்­ளார்.

அத்­து­டன், கெப்­பல் நிறு­வனத்­தின் மூத்த நிர்­வா­கி­கள் பிரே­சில் எண்­ணெய் நிறு­வன அதி­கா­ரி­க­ளுக்கு லஞ்­சம் அளித்த விவ­கா­ரம் பற்­றி­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் பல கேள்­வி­க­ளைத் தாக்­கல் செய்­துள்­ள­னர்.