வசதி குறைந்தோரின் பசியைக் குறைக்க 25,000 கிலோ அரிசி விநியோகம்

1 mins read
93240f4a-3f8f-4342-af53-7d5b3d76dad2
ஜூ சியட் வட்­டா­ரத்­தில் உள்ள முதி­யோர் இல்­லங்­கள், தேவா­ல­யங்­கள், பள்­ளி­வா­சல்­கள் ஆகி­ய­வற்­றுக்கு 25,000 கிலோ அரிசி வழங்­கப்­பட்­டுள்­ளது. படம்: ஜயன்ட் -

சிங்­கப்­பூ­ரிலுள்ள வசதி குறைந்­த­வர்­க­ளுக்கு இரண்டு ஆண்­டு­களில் ஒரு மில்­லி­யன் வேளை உணவை வழங்­கும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக ஜூ சியட் வட்­டா­ரத்­தில் உள்ள முதி­யோர் இல்­லங்­கள், தேவா­ல­யங்­கள், பள்­ளி­வா­சல்­கள் ஆகி­ய­வற்­றுக்கு 25,000 கிலோ அரிசி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஐந்து கிலோ­கி­ராம் மெடோஸ் தாய்­லாந்து அரிசி அடங்­கிய 5,000 பொட்­ட­லங்­களை டிஎ­ஃப்ஐ ஹெவ் யூ ஈட்­டன் (நீங்­கள் சாப்­பிட்­டீர்­களா) என்ற திட்­டத்­தின்­கீழ், டிஎ­ஃப்ஐ நிறு­வ­ன­மும் யுஓபி வங்­கி­யும் விநி­யோ­கித்­தன. டிஎ­ஃப்ஐ நிறு­வ­னம் ஜயன்ட், கோல்ட் ஸ்டோ­ரெஜ் கடை­களை நடத்தி வரு­கிறது.

தி ஃபுட் பேங் சிங்­கப்­பூர் எனும் லாப­நோக்­க­மற்ற அமைப்­பு­டன் சேர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட உணவு விநி­யோ­கத் திட்­டம் சென்ற ஆகஸ்ட் தொடங்­கப்­பட்­டது. வசதி குறைந்­த­வர்­களின் பசி­யைக் குறைத்து உண­வுப் பாது­காப்பை அதி­க­ரிப்­பது அதன் நோக்­கம். சிக்லாப் சவுத் சமூக மன்றத்தில் நேற்று மாலை வழங்கப்பட்ட அரிசி, 62,500 வேளை உணவுக்குச் சமமாகும்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூரின் பண்டிகைகளில் உணவு முக்கிய இடம் பிடிப்பதையும் உள்ளூர்வாசிகள் அரிசியை உணவாக பிரதானமாக உண்பதையும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் சிலர் அரிசி வாங்க சிரமப்படுவதாக அவர் கூறினார்.