சிராங்கூன் நார்த் அவென்யூ 4க்கு அருகே வசிப்போர் பயனடைய தோதாக புதிய நிலையம் வீட்டின் அருகிலேயே மருத்துவப் பரிசோதனை

2 mins read
b776d88e-59c2-4ec3-969a-1cac04b7e080
-

சிராங்­கூன் நார்த் அவென்யூ4க்கு அருகே வசிப்­ப­வர்­கள், தங்­கள் வீடு­க­ளுக்கு அரு­கி­லேயே குறைந்த கட்­ட­ணத்­தில் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு பரி­சோ­த­னை­களைச் செய்­து­கொள்­ள­லாம்.

இதற்­குத் தோதாக, ஜாலான் காயூ சமூக சுகா­தார நிலை­யம் நேற்று தொடங்­கப்­பட்­டது. அதில் மானி­யத்­து­டன் கூடிய கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும். குடி­யி­ருப்­பாளர்­கள் மாதா­மா­தம் தங்­கள் உடல்­ந­ல­னைப் பரி­சோ­தித்­துக் கொள்­ள­லாம்.

சமூ­கத்­தில் 40 வய­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தங்­க­ளு­டைய உடல்­ந­லனைத் தாங்­களே நல்­ல­படி பார்த்­துக்­கொள்ள வேண்­டும்.

இதை ஊக்­க­மூட்­டும் வகை­யில் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு போன்ற நோய்­களை மக்­கள் முன்­ன­தா­கவே தெரிந்­து­கொள்ள இந்­தப் புதிய நிலை­யம் உத­வும்.

மக்­கள் கழ­கத்­தின்கீழ் செயல்­படும் ஜாலான் காயூ தொகுதி அலு­வ­ல­கம் இந்த நிலை­யத்­தைத் தொடங்கி இருக்­கிறது.

முன்­னோ­டித் தலை­மு­றை­யைச் சேர்ந்­த­வர்­கள் இல­வ­ச­மா­கப் பரி­சோ­த­னை­களை செய்­து­கொள்­ள­லாம். மெர்­டேக்கா தலை­மு­றை­தா­ரர்­கள் அல்­லது சமூக சுகா­தார உத­வித் திட்­டத்­தில் (சாஸ்) சேர்ந்து இருப்­போ­ருக்கு கட்­ட­ணம் $2.

இதர வகை சாஸ் அட்­டை­யைக் கொண்­டி­ருப்­போ­ருக்கு $5 கட்­ட­ண­மாக வசூ­லிக்­கப்­படும். மற்­ற­வர்­க­ளுக்கு கட்­ட­ணம் $20.

வீட்­டில் உடல்­ந­லனுக்குத் தோதான உண­வு­க­ளைச் சமைக்­கும் முறை­கள் பற்றி வல்­லு­நர்­கள் அந்த நிலை­யத்­தில் உரை­யாற்று­வார்­கள். உடற்­ப­யிற்சி வகுப்­பு­களும் அங்கு நடக்­கும்.

புதிய நிலை­யம் நீரி­ழிவு போன்ற நோய் உள்­ள­வர்­களைக் கண்­ட­றிந்து அவர்­களை மேல் சிகிச்­சைக்­காக அந்­தப் பகு­தி­யில் செயல்­படும் தனி­யார் மருத்­து­வர்­களி­டம் அனுப்பி வைக்­கும்.

அந்த நிலை­யம் திங்­கட்­கிழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை காலை 9 மணி முதல் நண்­ப­கல் 12 மணி வரை செயல்­படும். நிலை­யத்தை நிர்­வ­கிக்க தொண்டூ­ழியர்­கள் அதி­க­மாகக் கிடைக்­கும்­போது மாலை 6 மணி வரை நிலை­யம் செயல்­படும்.

இந்­தத் திட்­டத்­தில் சேர்ந்­து­கொள்­ளும்­படி மக்­க­ளுக்கு ஊக்­க­மூட்­டும் வகை­யில் முத­லில் தங்­களைப் பதிந்­து­கொள்­ளும் 1,000 பேருக்­கு­ காஹா பிரை­வெட் லிமிட்ட்டெ தயா­ரிக்­கும் இல­வச கைக்­க­டி­கா­ரம் வழங்­கப்­படும்.

அந்­தக் கடி­கா­ரங்­க­ளைக் கொண்டு தனி­யார் மருத்­து­வர்­கள் நோயா­ளி­க­ளைக் கண்­காணிக்­க­வும் முடி­யும் என்று தெரிகிறது.