பாசிர் ரிஸ் வட்டாரத்தில் சென்ற மாதம் 27ஆம் தேதி, நடந்து சென்ற 68 வயது மாது ஒருவரை மோதிய வேன் பின்னர் நிற்காமல் சென்றதாகக் காவல்துறை கூறியது.
சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மாது பின்னர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
பாசிர் ரிஸ் டிரைவ் ஆறு, பாசிர் ரிஸ் டிரைவ் ஒன்று ஆகியவற்றுக்கு இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த விபத்து குறித்து ஜனவரி 27ஆம் தேதி காலை 6.05 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
கவனமின்றி வேனை ஓட்டி மரணம் விளைவித்ததற்காக, 60 வயது ஆடவர் கைது செய்யப்பட்டு உள்ளார். காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது.

