தங்குவிடுதியில் தமிழக ஆடவர் திடீர் மரணம்

1 mins read
757b263d-c857-4426-8dac-72c0eb17bf74
-

ரச்­சனா வேலா­யு­தம்

வேலை முடிந்து குளிக்­கச் சென்ற­போது 39 வயது வெளி­நாட்டு ஊழி­யர் ராம­நா­தன் சீனி­வா­சன் (படம்) நேற்று முன்­தி­னம் தங்­கு­வி­டு­தி­யில் மயங்கி விழுந்­தார்.

உட­ன­டி­யாக இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்ட அவர் மூளை­யில் ரத்­தக்­க­சி­வும் அத­னால் பக்­க­வா­த­மும் ஏற்­பட்டு இரவு 8.35 மணிக்கு உயி­ரி­ழந்­ததாகத் தெரிவிக்கப்பட்டது.

'ஹீடெக் ஜிடோங்' தனி­யார் நிறு­வ­னத்­தில் கப்­பல் கட்­டு­மா­னத் துறை­யில் சீனி­வா­சன் வேலை செய்­தார்.

வேலை­யி­டத்­தில் அவர் உயி­ரி­ழக்­க­வில்லை என்­ப­தால் குடும்­பத்­திற்கு இழப்­பீடு தரப்­ப­டாது. எனி­னும், நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் ஒரு தொகை வழங்­கப்­படும் என்று நிறுவனம் கூறி­யது.

தமி­ழ­கத்­தின் புதுக்­கோட்டை மாவட்­டம், செம்­ம­னாம்­பொட்­டல் எனும் ஊரைச் சேர்ந்த திரு சீனி­வா­சன், கடந்த ஏழு மாதங்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­து­வந்­தார்.

"இன்­னும் இரண்டு மாதங்­களில் அவ­ருக்­குத் திரு­ம­ண­மா­க­வி­ருந்த நிலை­யில், இப்­படி நடக்­கும் என நாங்­கள் எதிர்­பார்க்­க­வில்லை," என்று அவ­ரது அண்­ணன் வாசு­தே­வன் கண்­ணீர்­விட்­டார்.

திரு சீனி­வா­ச­னின் நல்­லு­டல் இன்று இரவு திருச்­சிக்­குக் கொண்டு­செல்­லப்­படும்.

திரு ராய் சோபன் என்­ப­வர், பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­திற்கு உதவ, தம் நண்­பர்­க­ளோடு சேர்ந்து கிட்­டத்­தட்ட $2,500 திரட்டி வாசு­தே­வ­னி­டம் கொடுத்­துள்­ளதாகக் கூறப்பட்டது.