பெரிய அளவிலான மின்சிகரெட் கடத்தல் முறியடிப்பு

பெரிய அளவிலான மின்சிகரெட் கடத்தல் முறியடிப்பு

1 mins read
8170fe86-6d5d-4827-9acf-346520f20a08
-

ஜன­வரி 23ஆம் தேதி அன்று 58,000க்கும் மேற்­பட்ட மின்சிக­ரெட்­டு­களை (வேப்) சிங்­கப்­பூ­ருக்­குள் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.

துவாஸ் துறை­மு­கத்­தில் உள் வரும் சரக்­குக் கொள்­க­ல­னுக்­குள் இது மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக குடி­நு­ழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் அதன் ஃபேஸ்புக் பதி­வில் நேற்று தெரி­வித்­தது.

ஆனால் பல­வ­கை­யான சரக்­கு­கள் அடங்­கிய அந்த கொள்­க­ல­னின் 'ஸ்கேன்' படங்­களைக் கண்டபோது, ஏதோ தவறு இருப்­பதை அதி­கா­ரி­கள் கவ­னித்­த­னர். பின்­னர் அவர்­கள் பொருள்­க­ளைப் பிரித்துச் சோத­னை­யிட்டனர்.

கொள்­க­ல­னில் இருந்த 19,592 பெட்­டி­களை வெட்­டித் திறந்­த­போது மொத்­தம் 58,776 'வேப் ரீஃபில்' புட்டிகள் சுகா­தார அறிவி­யல் ஆணை­யத்­தால் கைப்­பற்­றப்­பட்­டன. விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது. 2021 அக்­டோ­ப­ரில் 2021ல் கைப்­பற்­றப்­பட்ட கிட்­டத்­தட்ட 60,000 மின்சிக­ரெட் பொருட்­கள் அள­வுக்கு, மிகப்­பெரிய அளவு இது.

சிங்­கப்­பூ­ரில் மின்சிக­ரெட் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கிறது. மின்சிக­ரெட் பயன்­ப­டுத்­தி­ய­தற்­கா­க­வும் வைத்­தி­ருந்­த­தற்­கா­க­வும் பிடி­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 2022ஆம் ஆண்­டில் 2020ஐ விட மும்­ம­டங்­காக அதி­க­ரித்­துள்­ளது. 2022ல், 4,916 பேர் பிடி­பட்­ட­னர். 2020ல் 1,266 பேரும் 2021ல் 4,697 பேரும் பிடி­பட்­ட­னர்.

கடந்த 2018 முதல் 2022 வரை, மின்சிக­ரெட் விற்­பனை, கடத்­தல் குற்­றங்­க­ளுக்­காக 860 பேர் பிடி­பட்­ட­னர். அதே கால­கட்­டத்­தில் 145 பேர் மீது வழக்­குத் தொட­ரப்­பட்­டது.

மின்சிக­ரெட் பொருள்க­ளைப் பயன்­ப­டுத்­து­தல், வைத்­தி­ருத்­தல் குற்­றங்­க­ளுக்கு $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும்.