சிகிச்சை, பரிசோதனைக்கு முழு மானியம் இனி இராது

சிகிச்சை, பரிசோதனைக்கு முழு மானியம் இனி இராது

2 mins read
1b7e5573-b826-442c-81b6-7ad7bb4a1df9
-

கொவிட்-19: தடுப்பூசியைத் தொடர்ந்து இலவசமாகப் போட்டுக்கொள்ளலாம்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூசியைத் தொடர்ந்து இல­வ­ச­மாகப் போட்­டுக்­கொள்­ள­லாம். ஆனால், கிருமி தொற்றி உள்ளதா என்­பதைப் பரி­சோ­தித்து தெரிந்து­கொள்­ள­வும் கிருமி தொற்­றி­யிருந்­தால் சிகிச்சை பெற­வும் இனி முழு மானி­யம் கிடைக்­காது.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வேலை அனு­ம­தி­தா­ரர்­கள், சில­வகை குறு­கி­ய­கால அனு­ம­தி­தா­ரர்­கள் ஆகிய அனை­வ­ரும் தொடர்ந்து இல­வ­ச­மா­கத் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இருந்­தா­லும் அந்­தத் தொற்­றுக்­கும் அதன் பின் விளை­வு­களுக்­கும் மருத்­து­வ­ம­னை­களில் அல்­லது கொவிட்-19 சிகிச்சை நிலை­யங்­களில் சிகிச்சை தேவைப்­ப­டு­வோர், ஏப்­ரல் முதல் 100 விழுக்­காடு மானி­யத்­தைப் பெற இய­லாது.

இதற்­கும் அவர்­க­ளின் தடுப்­பூசி நில­வ­ரத்­திற்­கும் தொடர்பு இருக்­காது என்று அறிக்கை தெரி­வித்­தது.

இதற்­குப் பதி­லாக வழக்­க­மான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மானி­யத் திட்­டங்­களை அவர்­கள் பயன்­படுத்­திக்கொள்­ள­லாம். அதா­வது அர­சாங்க மானி­யங்­கள், மெடி­ஷீல்டு லைஃப், மெடி­சேவ் ஆகி­ய­வற்றை அவர்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம்.

குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­, அவர்­களுக்குச் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் செலவு தொடர்ந்து கட்­டுப்­ப­டி­யாகக் கூடி­ய­தா­கவே இருக்­கும்.

இதை உறுதிசெய்ய நிதி­ உதவித் திட்­டம் அவர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் என்று அமைச்சு உறுதிபட தெரிவித்தது.

கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு செய்­தி­யா­ளர்­கள் கூட்­டம் நேற்று நடந்­தது.

அதில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் இது பற்றி விளக்­கம் அளித்­தார்.

சிங்­கப்­பூர்­வா­சி­க­ளுக்கு இது­வரை கொவிட்-19 பரி­சோ­த­னை­யும் சிகிச்­சை­யும் இல­வ­ச­மாக அல்­லது மிகக் குறைந்த கட்­ட­ணத்­தில் கிடைத்து இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

இதைப் பொறுத்­த­வரை 100 விழுக்­காடு மானி­யத்­தை இனிமேலும் தொடர இய­லாது என்­று அமைச்சர் கூறினார்.

இத­னி­டையே, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­யி­ருப்­போரை தனி நிலை­யங்­களில் தனி­மைப்­படுத்த வேண்­டிய தேவை இனி இல்லை என்று அமைச்சு தெரி­வித்­தது.

இருந்­தா­லும்­கூட சில நிலை­யங்­கள் இன்­ன­மும் செயல்­படும். தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­வோர் அங்கு தங்­க­லாம். அதற்­குக் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும்.

நல­மிக்க எஸ்ஜி செயல்­திட்­டத்­தின்­கீழ் தேசிய அள­வில் பரிந்­து­ரைக்­கப்­பட்டு இருக்­கும் அத்­தனை தடுப்­பூ­சி­க­ளை­யும் இல­வ­ச­மாக மக்­க­ளுக்கு வழங்­கு­வது பற்றி அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.