எல்லைக் கட்டுப்பாடுகள் எல்லாம் வரும் 13 முதல் அகலும்

எல்லைக் கட்டுப்பாடுகள் எல்லாம் வரும் 13 முதல் அகலும்

2 mins read
70a5a40d-b21e-4406-ab78-c6f96fee85b0
-

சிங்­கப்­பூ­ரில் நடப்­பில் இருக்கும் எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தும் பிப்­ர­வரி 13 முதல் அக­லு­கின்றன. வெளி­நா­டு­களில் இருந்து வரு­வோர் தங்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்­பதை மெய்ப்­பிக்க இங்கு வரு­வ­தற்கு முன்­ன­தாக செய்து கொள்ள வேண்­டிய பரி­சோ­த­னை­யும் இனி தேவை இருக்­காது.

இங்கு வரு­வ­தற்கு முன் தடுப்­பூசி சான்­றி­த­ழைக் காட்ட வேண்­டிய தேவை­யும் இனி இருக்­காது. இதன்­மூ­லம் சிங்­கப்­பூர் நடப்­பில் இருந்த அனைத்து எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளை­யும் அகற்­றி­வி­டும்.

முழு­வ­தும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் குறு­கிய கால பய­ணம் மேற்­கொண்டு சிங்­கப்­பூருக்கு வரு­வோர், பய­ணக் காப்­பு­றுதி வாங்க வேண்­டிய தேவை­யும் இனி இருக்­காது என்று சுகா­தார அமைச்சு நேற்று அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

இருந்­தா­லும் அவ­சி­யம் ஏற்­படும் பட்­சத்­தில் இவை மீண்­டும் நடப்­புக்கு வரும் என்று அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தது. அப்­போது பேசிய வர்த்­தக தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் இது பற்றி பல விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் சிங்­கப்­பூ­ரர்­கள் அதற்கு முன்­ன­தாக தாங்­கள் பய­ணம் மேற்­கொள்­ளும் நாடு­க­ளின் நில­வரங்­களை நன்கு சோதித்து பார்த்­துக்­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் வலி­யு­றுத்­திக் கேட்­டுக்­கொண்­டார்.

அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூருக்கு வரும் பய­ணி­களைத் தொடர்ந்து பரி­சோ­திப்­பார்­கள். அவர்­களுக்கு மஞ்­சள் காய்ச்­சல், மத்­திய கிழக்கு சுவா­சப் பிரச்­சி­னை­கள், இபோலா தொற்று போன்ற பாதிப்பு­கள் இருக்­கி­றதா என்­ப­தைக் கண்டறிய இந்­தச் சோதனை நடத்­தப்­படும்.

விமா­னம், கடல் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் தரை வழி வரும் குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் எல்­லா­ருமே தொடர்ந்து எஸ்ஜி வருகை அட்­டை­யைப் பூர்த்தி செய்து உடல்­நல அறிக்­கை­யைத் தாக்­கல் செய்ய வேண்டி இருக்­கும்.