குழாய் பொருத்துவோர், மின்வேலை ஊழியரின் சம்பளம், வேலை உயர என்டியுசி புதிய ஏற்பாடு

குழாய் பொருத்துவோர், மின்வேலை ஊழியரின் சம்பளம், வேலை உயர என்டியுசி புதிய ஏற்பாடு

2 mins read
7afa3dd5-ef6d-4be1-92c6-c835e0569228
-

குழாய் பொருத்­து­வோர், மின்­சார வேலை­க­ளைச் செய்­வோர் போன்ற தேர்ச்சி பெற்ற தொழில்­நுட்ப வேலை­களில் இளை­யர்­களைச் சேர்க்­கும் நோக்­கத்­தில் தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) புதிய ஓர் ஏற்­பாட்டை முன்­வைத்து இருக்­கிறது.

அந்த ஏற்­பாட்­டின் மூலம் இத்­த­கைய ஊழி­யர்­கள் பதவி உயர்வு பெற தெள்­ளத்­தெ­ளி­வான வழி­முறை இருக்­கும். 'முன்­மா­திரி வாழ்க்­கைத் தொழில் மேம்­பாடு' என்று அந்தப் புதிய ஏற்­பாடு குறிப்­பி­டப்­படு­கிறது.

தேர்ச்­சி­யுள்ள, மிக முக்­கி­ய­மான இத்­த­கைய தொழில்­நுட்­பர்­க­ளின் சம்­ப­ளத்தை உயர்த்­த­வும் வேலை உயர்­வைச் சாத்­தி­ய­மாக்­க­வும் அந்­தப் புதிய ஏற்­பாடு முயலும் என்று என்­டி­யு­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் இங் சீ மெங் நேற்று தெரி­வித்­தார்.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ளம் முறை 2012ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதன் கார­ண­மாக குறை சம்­பள சிங்கப்பூர் ஊழி­யர்­கள் பெரி­தும் பலன் அடைந்துள்ளனர்.

துப்­பு­ர­வா­ளர்­கள், பாது­கா­வ­லர்­கள் போன்ற இத்­த­கைய ஊழி­யர்­கள் தங்­க­ளு­டைய உற்­பத்­தித் திற­னை­யும் தேர்ச்­சி­க­ளை­யும் மேம்­ப­டுத்­திக்கொண்டு அதன்­மூ­லம் இப்­போது அதி­கம் சம்பாதிக்­கி­றார்­கள்.

அதுபோ­லவே, என்­டி­யு­சி­யின் புதிய ஏற்­பாடு நடப்­புக்கு வரும்­போது தேர்ச்­சி­யுள்ள வேலை­களை உள்­ள­டக்­கும் தொழில்­துறை­யைச் சேர்ந்த ஊழி­யர்­கள், குறிப்­பிட்ட தேர்ச்சி, பயிற்­சி­கள் மூலம் நன்­மை­ய­டைந்து பதவி உயர்­வை­யும் சம்­பள உயர்­வை­யும் பெறு­வார்­கள்.

உயர்­கல்வி நிலை­யங்­களைச் சேர்ந்த மாண­வர்­கள் பல தேர்ச்சி­க­ளைக் கற்­றுக்­கொண்டு தொழில்­நுட்­பர்­க­ளாக ஆவ­தற்­கும் இப்புதிய ஏற்­பாடு வகை­செய்யும்.

இந்த ஏற்­பாட்­டில் குழாய் வேலை செய்­ப­வர்­கள், மின்­சார வேலை பார்ப்­ப­வர்­கள், குளிரூட்டி, இயந்­திரக் காற்­றோட்ட சாத­னங்­களைச் சரி­செய்­ப­வர்­கள் போன்ற மூன்று முக்­கிய துறை­களில் இளை­யர்­களை உரு­வாக்க முத­லில் இந்­தப் புதிய ஏற்­பாடு முயற்சி செய்­யும். இதுவே இதன் முன்­னு­ரி­மை­யாக இருக்­கும்.

இந்த மூன்று வகை தொழில்­நுட்­பர்­களும் சிங்­கப்­பூ­ரின் அன்­றாட வாழ்­வில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இத்­த­கைய தொழில்­நுட்­பர்­களும் உலோக, இயந்­திர ஊழி­யர்­கள், கட்­டு­மா­னத் துறை­யில் வேலை பார்க்­கும் ஊழி­யர்­கள் உள்­ளிட்ட இதர தொழில்­நுட்­பர்­களு­மாக மொத்­தம் 50,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­கள் இத்­த­கைய அத்­தி­யா­வ­சிய வேலை­களைப் பார்த்து வரு­கி­றார்­கள்.

இருந்­தா­லும் இத்­த­கைய ஊழி­யர்­க­ளுக்கு வயது கூடி வருகிறது. இதேநிலை நீடித்­தால் இந்த வேலை­க­ளைப் பார்க்க போதிய அள­வுக்கு ஊழி­யர்­கள் இருக்­க­மாட்­டார்­கள். இவர்­க­ளின் சரா­சரி சம்­ப­ளம் சென்ற ஆண்­டில் $2,600 ஆக இருந்­தது. இது ஏறக்­கு­றைய குறைந்த வரு­வாயை ஈட்­டும் ஊழி­யர்­க­ளின் ஊதிய அளவை ஒத்து இருக்கிறது என்­றும் திரு இங் சுட்­டி­னார்.

இத­னால்­தான் இந்த வேலை­களுக்கு இளை­யர்­களை கவர்ந்து இழுத்து அவர்­க­ளின் ஊதி­ய­மும் வாழ்க்­கைத் தொழி­லும் உயர புதிய ஏற்­பாடு உத்­தே­சிக்­கப்­பட்டு வருவதாக திரு இங் கூறினார்.