சிங்கப்பூர்-வியட்னாம் இடையே புதிய ஒத்துழைப்பு; புதிய உடன்பாடு

சிங்கப்பூர்-வியட்னாம் இடையே புதிய ஒத்துழைப்பு; புதிய உடன்பாடு

2 mins read
08378370-3f60-42b8-9f09-41d9d10d6a12
-

சிங்­கப்­பூ­ரும் வியட்­னா­மும் தங்­க­ளுக்கு இடை­யி­லான ஒத்­து­ழைப்பை மேலும் ஆழ­மாக்­கும் வகை­யில் புதிய உடன்­பா­டு­களில் கையெ­ழுத்திட்­டுள்­ளன.

மின்­னி­லக்­கம் மற்­றும் பசுமைப் பொரு­ளி­யல் துறை­யில் இரு நாடு­களும் இணக்­கம் கண்­டுள்­ளன.

வியட்­னா­மியப் பிர­த­மர் பாம் மின் சின் அதி­கா­ர­பூர்வ பய­ணம் மேற்­கொண்டு சிங்­கப்­பூர் வந்­துள்­ளார்.

அப்­போது பசுமை-மின்­னி­லக்கப் பொரு­ளி­யல் தொடர்பில் நான்கு உடன்­பா­டு­கள் கையெ­ழுத்­தா­கின.

இது, எரி­பொ­ருள், நீடித்த நிலைத்­தன்மை, உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள், மின்­னி­லக்­கம், புத்­தாக்­கம் மற்­றும் தொடர்பு ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய 2022ல் கையெ­ழுத்­தான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது.

நேற்று இஸ்­தா­னா­வில் அர­சாங்­கங்­க­ளுக்கு இடை­யே கையெ­ழுத்­தான ஆவ­ணங்­களை பரிமாறும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங்­கும் வியட்­னா­மிய திட்ட, முத­லீட்டு அமைச்­சர் நீயென் சி டுங்­கும் பங்கேற்றனர்.

பிர­த­மர் லீ சியன் லூங், வியட்­னா­மியப் பிர­த­மர் சின் ஆகி­யோர் முன்­னி­லை­யில் இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றது.

இரு நாடு­க­ளுக்கும் இடையி லான 50 ஆண்­டு­கால அர­ச­ தந்­திர உற­வைக் கொண்­டா­டும் வகையில் ஆண்டு முழு­வ­தும் நடைபெறும் பல்­வேறு நடவடிக் கைகளின் தொடக்­க­மாக வியட் னாமியப் பிரதமர் சின்னின் பயணம் அமைகிறது. மூன்று நாள் பய­ணமாக அவர் சிங்­கப்­பூர் வந்­துள்­ளார்.

இஸ்­தா­னா­வில் நடை­பெற்ற மதிய விருந்து நிகழ்ச்­சி­யில் பேசிய பிர­த­மர் லீ சியன் லூங், இரு தரப்­பி­லும் இரு தலை­வர் ­க­ளுக்கு இடை­யி­லான புரிந்­து­ணர்வு, அர­சி­யல் நம்­பிக்கை ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் நீண்­ட­கால, ஆழ­­மான உறவு நீடிக்­கிறது என்று குறிப்­பிட்­டார்.

பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு, மனி­த­வள மேம்­பாடு தவிர இணை­யப் பாது­காப்பு, கரிம வெளி­யேற்­றத்­தைக் குறைப்­பது, நிலைத்­தன்­மை­மிக்க உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் போன்ற புதிய துறை­க­ளி­லும் இரு நாடு­களும் சேர்ந்து செயல்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக அவர் கூறினார்.

"சிங்­கப்­பூ­ரும் வியட்­னா­மும் பல வட்­டா­ரப் பிரச்­சி­னை­களில் பொது­வான எண்­ணத்­தைக் கொண்­டுள்­ளன. ஆசி­யானை மையப்­ப­டுத்­தும் கடப்­பாடு, ஒற்­று­மையை நிலை­நாட்­டு­வது உள்­ளிட்­ட­வற்­றில் நெருங்­கிய பங்­காளி­க­ளா­கத் திக­ழும் சிங்­கப்­பூ­ரும் வியட்­னா­மும் நட்­பு­றவை வரும் ஆண்­டு­களில் வலுப்படுத்த ­வதை எதிர்­பார்க்­கின்­றன என்­றும் திரு லீ கூறி­னார்.

திரு சின் தமது உரை­யில் சிங்­கப்­பூ­ருக்­கும் வியட்­னா­முக்­கும் இடை­யி­லான ஐம்­பது ஆண்டுக­ளுக்­கும் மேலான உறவு பரஸ்­பர நம்­பிக்­கை­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் குறிப் தாகத் தெரிவித்தார்.