தெங்கா, பொங்கோல் வட்டாரங்களில் புதிய பள்ளிகள்; 'ஏசிஎஸ்' இடம் மாறுகிறது

தெங்கா, பொங்கோல் வட்டாரங்களில் புதிய பள்ளிகள்; 'ஏசிஎஸ்' இடம் மாறுகிறது

2 mins read
d5ad995e-e62f-430e-acee-c68fb55df47f
-

தெங்கா, பொங்­கோல் போன்ற புதிய குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் அதி­க­ரிக்­கும் பள்­ளி­க­ளின் தேவை­யைப் பூர்த்தி செய்ய புதிய பள்­ளி­கள் கட்­டப்­படும் அல்­லது மற்ற இடங்­களில் உள்ள பள்­ளி­கள் இப்பகுதிக்கு மாற்­றப்­படும்.

ஏற்­கெ­னவே பய­னி­யர் தொடக்­கப்­பள்ளி 2026ல் தெங்­கா­வுக்கு மாற்­றப்­படும் என்று கல்வி அமைச்சு அறிவித்­தி­ருந்­தது.

இது, தெங்­கா­வில் இடம்­ பெறும் முதல் தொடக்­கப்­பள்­ளி­யா­கும்.

இந்த நிலை­யில் 2026ஆம் ஆண்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ரின் மேற்கு, வட­கி­ழக்கு வட்­டா­ரங் களுக்கு மேலும் நான்கு பள்­ளி­கள் இடம் மாற்­றப்­படும் அல்­லது புதிதாகக் கட்­டப்­படும் என்று கல்வி அமைச்சு நேற்று கூறி­யது.

இதேபோல 'ஸ்பெட்' எனப்­படும் சிறப்­புத் தேவை­யு­டைய இரண்டு பள்­ளி­களும் இங்கு இடம் மாற்­றப்­படும் அல்­லது புதிதாகத் திறக்­கப்படும் என்று அமைச்சு குறிப்­பிட்டு உள்­ளது.

மேலும் செங்­காங்­கில் 2026ஆம் ஆண்­டில் புதிய உயர்­நி­லைப் பள்ளி ஒன்று செயல்­ப­டத் தொடங்­கும் என எதிர்­பார்க்­கப் படு­கிறது.

இதை­ய­டுத்து புக்­கிட் பாத்­தோக் ஈஸ்ட்­டில் உள்ள புக்­கிட் வியூ தொடக்­கப்­பள்ளி 2027ல் இரண்டு கிலோ மீட்­டர் தொலை­வில் புக்­கிட் பாத்­தோக் வெஸ்ட்­டுக்கு இடம் மாறுகிறது.

2028ஆம் ஆண்டுவாக்­கில் தெங்­கா­வில் புதிய தொடக்­கப்­பள்ளி தொடங்­கப்­படும் என்­றும் 2030ஆம் ஆண்­டில் ஆங்­கிலோ சீனப் பள்ளி (ஏசி­எஸ்- தொடக்­கப்­பள்ளி) நியூட்­ட­னில் உள்ள பார்க்­கர் சாலை­யி­லி­ருந்து புதிய தொடக்­க­நிலை 1 மாண­வர் களைக் கொண்டு தெங்­கா­வில் செயல்­ப­டத் தொடங்­கும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

அதே ஆண்­டில் முதல் முறை­யாக பெண்­களும் அந்­தப் பள்­ளி­யில் சேர்த்­துக் கொள்­ளப்­ப­ட­ விருக்­கின்றனர்.

இது ஒரு முக்­கிய மாற்­றம் என்று குறிப்­பிட்ட கல்வி அமைச்சு, ஆங்­கிலோ சீனப் பள்­ளி­யு­டன் 2022ஆம் ஆண்டு தொடக்­கத்­தி­லி­ருந்து இது குறித்து ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தது.

'ஏஎஸ்டி' எனக் குறிப்­பி­டப்­படும் மதி­யி­றுக்­கம் கொண்ட மாண­வர்­க­ளுக்­கான பள்­ளி­க­ளுக்­கும் தேவை அதி­க­ரித்து வரு­கிறது.

இத­னால் சிறப்­புத் தேவை­ யுடைய மாண­வர்­க­ளுக்­கான ஏற்­பா­டு­கள் பற்றி கல்வி அமைச்சு நேற்று விளக்­கி­யது.

வரும் 2026ஆம் ஆண்­டி­லி­ருந்து சுவா சூ காங்­கில் உள்ள முந்­தைய சுவா சூ காங் உயர்­நி­லைப் பள்ளியில் தற்­கா­லிக இடத்­தில் மதி­யி­றுக்­கம்கொண்ட மாண­வர்­க­ளுக்­கான 5வது பள்ளி செயல்­ப­டத் தொடங்­கும்.

இப்­பள்­ளியை ஏசி­எஸ்­ஸு­டன் சேர்ந்து மெத்­த­டிஸ்ட வெல்­ஃபேர் சர்­விசஸ் நடத்­தும்.

2031ல் இப்­பள்­ளி­ பின்னர் தெங்­கா­வில் உள்ள நிரந்­தர இடத்­துக்கு பின்னர் மாறும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரி­வித்­தது.