மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான டின் பெய் லிங், சென்ற வாரம் கிராப் சிங்கப்பூர் நிறுவனத்தின் பொதுஉறவு, கொள்கைப் பிரிவின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து கண்டனக்குரல்கள் எழுந்தன. இதையடுத்து அவர், அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, கிராப் சிங்கப்பூர் நிறுவனத்தில் நிறுவன மேம்பாட்டுப் பிரிவில் புதிய பொறுப்பை ஏற்கிறார் என்று நிறுவனம் அறிக்கையில் தெரிவித்தது.
புதிய பொறுப்பு ஏற்கும் திருவாட்டி டின், சிங்கப்பூரில் கிராப் நிறுவனத்தின் பொது உறவு, கொள்கைப் பணிகளில் ஈடுபட மாட்டார்.
சிங்கப்பூர் அரசாங்க அதி காரிகளுடன் கூடிய பொதுக் கொள்கை விவாதிப்புகளில் அவர் கிராப் நிறுவனத்தைப் பிரதிநிதிக்கமாட்டார் என்று அறிக்கை கூறியது.
இதனிடையே, இதன் தொடர்பில் தனியாக அறிக்கை வெளியிட்ட மக்கள் செயல் கட்சி, கிராப் நிறுவனத்தில் திருவாட்டி டின்னின் பணி மாற்றப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தியது.

