6 பிடிஓ, 15 மறுவிற்பனை வீடுகளை வீவக கைப்பற்றியது

6 பிடிஓ, 15 மறுவிற்பனை வீடுகளை வீவக கைப்பற்றியது

2 mins read
7caff094-d30f-4976-9ce6-da27512d021d
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் 2017 முதல் 2022 நவம்­பர் வரை 21 வீவக வீடு­க­ளைக் கைப்­பற்­றி­யது. குறைந்­த­பட்ச குடி­யி­ருப்­புக் கால விதி­மு­றை­கள் மீறப்­பட்­டதே அதற்­கான கார­ணம். அந்த வீடு­களில் ஆறு வீடு­கள் கழ­கத்­தி­டம் இருந்து வாங்­கப்­பட்­டவை. 15 வீடு­கள் மறு­விற்­பனை வீடு­கள்.

குறைந்­த­பட்ச குடி­யி­ருப்­புக் கால விதியை மீறி­ய­தன் தொடர்­பில் 53 வீட்டு உரி­மை­யா­ளர்­களுக்கு எதி­ராக அம­லாக்க நட­ வ­டிக்­கை­கள் எடுத்­த­தாக சென்ற ஆண்டு டிசம்­ப­ரில் கழ­கம் தெரி­வித்­தது. அந்த நட­வ­டிக்­கை­களின் விளை­வாக கழ­கம் 21 வீடு­களைக் கட்­டா­ய­மாக திருப்பி எடுத்­துக்­கொண்­டு­விட்­டது.

அம­லாக்க நட­வ­டிக்­கை­களுக்கு இலக்கான 53 உரி­மை­யா­ளர்­களில் 25 பேர் கழ­கத்­தி­டம் இருந்து நேர­டி­யாக வீடு­களை வாங்கி இருந்­தார்­கள். 28 பேர் பொதுச் சந்­தை­யில் வீட்டை வாங்­கி­யி­ருந்­தார்­கள்.

அம­லாக்க நட­வ­டிக்­கை­க­ளின் ஒரு பகு­தி­யாக, மொத்­தம் 21 வீடு­களைக் கழ­கம் திருப்பி எடுத்துக்­கொண்­டு­விட்­டது. இந்த விவ­ரங்­களைக் கழ­கத்­தின் பேச்­சா­ளர் தெரி­வித்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

உரி­மை­யா­ளர்­கள் குடி­யி­ருப்­பதற்­கா­கவே வீடு­கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. குறைந்­த­பட்ச குடி­யி­ருப்­புக் காலத்­தின்­போது அவர்­கள் தங்­கள் வீடு­களில் குடி­யி­ருந்­தாக வேண்­டும் என்று கழ­கம் தெரி­வித்­தது.

குறைந்­த­பட்ச குடி­யி­ருப்­புக் காலத்­தின்­போது வீட்டு உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் வீடு­களை விற்க முடி­யாது. முழு வீட்­டை­யும் வாட­கைக்­கு­விட முடி­யாது.

அவர்கள் தனி­யார் குடி­யி­ருப்­புச் சொத்­து­களில் முத­லீடு செய்­ய­வும் முடி­யாது என்று பேச்­சா­ளர் விளக்­கி­னார்.

கழ­கத்­தி­டம் இருந்து நேர­டி­யாக வாங்­கப்­படும் வீடு­க­ளுக்­கும் மறு­விற்­பனை வீடு­க­ளுக்­கும் குறைந்­த­பட்ச குடி­யி­ருப்­புக் கால விதி பொருந்­தும் என்றார் அவர்.