உடன்பாட்டை சிங்கப்பூர் முறைப்படி ஏற்றது; பாதக முறையில் மீன்பிடிக்க மானியம் இராது

உடன்பாட்டை சிங்கப்பூர் முறைப்படி ஏற்றது; பாதக முறையில் மீன்பிடிக்க மானியம் இராது

1 mins read
4aabb135-d5a3-4a4a-a83c-5a09fcf2725f
-

மீன் இனங்­க­ளுக்­குப் பாதிப்பு ஏற்­படும் வகை­யில் மீன்­பி­டிக்க மானியம் வழங்­கும் நடை­முறைக்கு சிங்­கப்­பூ­ரில் விரை­வில் தடை விதிக்­கப்­படும்.

உல­கப் பெருங்­க­டல் உயிரினங்­க­ளைப் பாது­காக்­கும் உலக வர்த்­தக நிறு­வ­னத்­தின் உடன்­பாட்டை முறை­யாக ஏற்­றுக்­கொண்டு நிறை­வேற்­றும் இரண்­டா­வது உறுப்பு நாடாக சிங்­க­ப்பூர் ஆகி இருக்­கிறது.

இதை அடுத்து அந்­தத் தடை நடப்­புக்கு வரு­கிறது.

அந்த உடன்­பாடு, சுற்­று­ச்­சூ­ழ­லைப் பாது­காப்­ப­தில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தும் முத­லா­வது அனைத்­து­லக வர்த்­தக உடன்­பா­டா­கும்.

அதை முறை­யாக ஏற்­றுக்­கொண்டு இருக்­கும் முத­லா­வது கட­லோர நாடு சிங்­கப்­பூர்.

கட­லில் மீன் இனங்­க­ளுக்­கு பாதிப்பு ஏற்­படும் வகை­யில் மீன்­க­ளைப் பிடிப்­ப­தால் உல­கில் மீன் வளம் குறை­கிறது.

இதைக் கருத்­தில் கொண்டு பாதகமான முறை­களில் மீன் களைப் பிடிக்­கும் நடை­மு­றைக்கு மானி­யம் கிடைப்­ப­தைத் தடை செய்­யும் உலக விதி­களை அந்த உடன்­பாடு வரை­ய­றுப்பதாக ஜெனி­வா­வில் செயல்­படும் உலக வர்த்­தக நிறு­வ­னம் தெரிவித்து உள்ளது. உடன்­பாட்டை சுவிட்­சர்­லாந்து ஜன­வரி 20ஆம் தேதி முறை­யாக ஏற்­றுக்கொண்­டது.

உடன்­பாடு நடை­மு­றைக்கு வர­வேண்டுமானால் உலக வர்த்தக நிறு­வ­னத்­தின் 164 உறுப்பு நாடு­களில் மூன்­றில் இரண்டு பங்கு நாடு­கள் தங்­கள் இணக்­கத்தை நிறு­வ­னத்­தி­டம் தாக்­கல் செய்ய வேண்­டும்.