தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவிரவாத மனப்போக்கு ஆபத்து: ஆய்வரங்கில் இளையர்கள்

2 mins read
17869f92-ceb6-4aa7-9632-c61312301121
-

இளை­யர்­கள், தங்­கள் சகாக்­கள் யாரா­வது தீவி­ர­வாத மனப்­போக்கு ஆபத்­தில் சிக்­கி­வி­டக்­கூ­டும் என்பது தெரியவந்­தால் அதுபற்றி ஆசி­ரி­யர், பெற்­றோர், அதி­கா­ரி­களி­டம் தெரி­விக்க வேண்­டும்.

தீவி­ர­வாத, பயங்­க­ர­வாத மனப்­போக்கு ஆபத்­தைத் தவிர்ப்­ப­தில் இளை­ய­ருக்கு இத்­த­கைய மிக முக்­கிய பொறுப்பு இருக்­கிறது என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் சுய தீவி­ர­வாத மனப்­போக்கை வளர்த்­துக் கொள்ளும் இளை­யர்­கள் முன்னிலும் அதி­க­மாக இருப்­பது கவலை தரு­வ­தா­க­வும் இந்­தப் பிரச்­சி­னை­யைச் சமா­ளிக்க மேலும் பல­வற்­றைச் செய்ய வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் மலாய் இளை­யர் நூல­கச் சங்­கத்­ (தாமான் பச்சாஆன்) தலைவர் அப்­துல் ஹலிம் காதர் கூறி­னார்.

மேலும் அதி­க­மான இளை­யர்­கள், மாண­வர்­கள், தீவி­ர­வாத சித்­தாந்­தத்­தில் ஈடு­படும் போக்கு தொடர்ந்­தால் நமக்­குப் பிரச்­சினை­தான் என்று தான் கரு­து­வதாக அவர் தெரி­வித்­தார்.

இதன் தொடர்­பில் இளை­யர்­கள் தங்­கள் சகாக்­கள் மீது கண்­வைத்து வர­வேண்­டும். சிங்­கப்­பூர் பாது­காப்­பான நாடாக இருப்பதை உறு­திப்­ப­டுத்து­வ­தில் அவர்­கள் தங்­கள் பங்கை ஆற்ற வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

'தீவி­ர­வா­தத்­தைத் தடுப்­ப­தில், சமூ­கப் பிணைப்பைப் பலப்­படுத்துவ­தில் இளை­ய­ரின் பங்கு' என்ற தலைப்­பில் தாமான் பச்சாஆன் ஏற்­பாட்­டில் நேற்று ஆய்­வ­ரங்கு நடந்தது.

அனைத்­துப் பின்­ந­லச் சேவைக் குழு­மம், சமய மறு­வாழ்வுக் குழு­மம் ஆகி­ய­வற்­று­டன் சேர்ந்து அந்த ஆய்­வ­ரங்­குக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

அதில் அல்­ச­கோஃப் அல்-அரே­பியா மத­ர­சா­வைச் சேர்ந்த 30 மாண­வர்­கள் கலந்­து­கொண்­டனர். அவர்­க­ளி­டையே அப்­துல் ஹலிம் பேசி­னார். ஆய்­வ­ரங்­கிற்கு உறு­து­ணை­யாக இருந்த அமைப்­பு­க­ளைச் சேர்ந்த பிர­மு­கர்­க­ளுடன் மாண­வர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.