ஜோகூர் முதலமைச்சரின் சிங்கப்பூர் வருகை

ஜோகூர் முதலமைச்சரின் சிங்கப்பூர் வருகை

1 mins read
fdc7975c-0c09-48f5-ac8d-56299543e093
-

ஜோகூர் முத­ல­மைச்­சர் ஒன் ஹஃபீஸ் காஸி சிங்­கப்­பூ­ருக்கு நேற்று தொடங்கி நாளை வரை மூன்று நாள் பணி­சார்ந்த வரு­கையை மேற்­கொண்­டுள்­ளார்.

வெளி­யு­றவு அமைச்சு நேற்று அதைத் தெரி­வித்­தது.

திரு ஒன் தமது வரு­கை­யின்­போது வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­ கிருஷ்­ணன், போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ ஆகி­யோ­ரைச் சந்­திப்­பார்.

அத்­து­டன் தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் முக­மது மாலிக்கி ஒஸ்­மான் இரு­வ­ரை­யும் அவர் சந்­திக்­க­வுள்­ளார்.

அத­னு­டன், மின்­வா­க­னக் கட்­ட­மைப்பு, வெள்ள பாதிப்­பைச் சமா­ளிக்­கும் நட­வ­டிக்­கை­கள், வேளாண்-உண­வுத் தொழில்­நுட்­பம் ஆகி­ய­வற்­றின் தொடர்­பில் சிங்­கப்­பூர் அர­சாங்க அமைப்­பு­க­ளோடு அவர் பேச்­சு­வார்த்தை நடத்­து­வார்.

சிங்­கப்­பூர் வர்த்­தக சம்­மே­ள­னம், சிங்­கப்­பூர் உற்­பத்­தித் துறை சம்­மே­ளனம் ஆகி­ய­வற்­றின் உறுப்­பி­னர்­க­ளு­டன் நடை­பெ­றும் வர்த்­த­கக் கருத்­த­ரங்­கி­லும் திரு ஒன் கலந்­து­கொள்­வார்.

ஜோகூர் மாநி­லச் செயற்­குழு அதி­கா­ரி­களும் அர­சாங்க அதி­கா­ரி­களும் திரு ஒன்­னு­டன் சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்­துள்­ள­னர்.