நீ சூன் லிங்கில் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முதியோருக்குக் கற்றுத்தரும் திட்டத்தின்கீழ் இதுவரை 1,100க்கும் அதிகமான முதியோர் பயன்பெற்றுள்ளனர். அத்திட்டம் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது.
கைப்பேசிவழி கட்டணம் செலுத்துதல், பணம் மாற்றுதல், மோசடி முயற்சிகளைக் கண்டுகொள்ளுதல் போன்றவை சொல்லிக் கொடுக்கப்பட்டன.
அந்த இலவச பயிலரங்குகளில் பயிற்றுவிப்பாளர்கள் முதியோருக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை தனிப்பட்ட பயிற்சி அளித்தனர்.

