கட்டாயம் இல்லாதபோதிலும் முகக்கவசம் அணியும் பயணிகள்

கட்டாயம் இல்லாதபோதிலும் முகக்கவசம் அணியும் பயணிகள்

2 mins read
fd6b8aa2-852b-401f-93d4-5567b2211322
-

பொதுப் போக்­கு­ரத்­தைப் பயன்

படுத்­தும்­போது முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்ற விதி­முறை நேற்று முன்­தி­னத்­து­டன் முடி­வுக்கு வந்­தது. நேற்று முதல் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­வோர் முகக்­க­வ­சம் அணி­யத் தேவை­யில்லை.

இருப்­பி­னும், நேற்று பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­தோ­ரில் பெரும்­பா­லா­னோர் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­னர்.

காலை நேர உச்­ச­வே­ளை­யின்­போது ஜூரோங் ஈஸ்ட், தோ பாயோ, பீஷான் ஆகிய எம்­ஆர்டி நிலை­யங்­க­ளி­லும் பங்­கிட் எல்­ஆர்டி நிலை­யத்­தி­லும் மூன்­றில் இரண்டு பய­ணி­கள் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­னர்.

அவர்­களில் பள்ளி மாண­வர்­களும் முதி­ய­வர்­களும் அடங்­கு­வர். கிட்­டத்­தட்ட அனைத்து எம்­ஆர்டி, எல்­ஆர்டி நிலைய ஊழி­யர்­களும் முகக்கவ­சம், கையு­றை­கள் ஆகி­ய­வற்றை அணிந்­தி­ருந்­த­னர்.

நேற்று எம்­ஆர்டி ரயி­லில் பய­ணம் செய்­த­போது முகக்­க­வ­சம் அணிந்த பய­ணி­களில் 20 வயது திரு லோக­நா­தன் ஹேமந்த் சந்­த­ரும் ஒரு­வர்.

பொதுப் போக்கு

வரத்­தைப் பயன்­ப­டுத்­தும்­போது முகக்­க­வ­சம் தேவை­யில்லை என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ள­போ­தி­லும் தாம் தொடர்ந்து முகக்

கவ­சம் அணிந்­து­கொள்ள இருப்

பதாக அவர் கூறி­னார்.

"எது வேண்­டு­மா­னா­லும் நடக்­க­லாம். பாது­காப்­பு­டன் இருக்க விரும்­பு­கி­றேன். அலு­வ­ல­கத்­தில் இருக்­கும்­போ­தி­லும் சாப்­பி­டும்­போது மட்­டுமே முகக்­க­வ­சத்தை அகற்­று­வேன். அல்­லது முகக்­க­வ­சம் சற்று அசௌ­க­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­னால் அதை அகற்­று­வேன். பெரும்­பா­லான நேரங்­களில் முகக்­க­வ­சத்தை அணிந்­தி­ருப்­பேன்," என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொடர்­பான பல கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­போ­தும் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும்­போது முகக்­க­வ­சம் தொடர்ந்து கட்­டா­ய­மாக இருந்­தது.

இந்­நி­லை­யில், இம்­மா­தம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து இந்­தக் கட்­டுப்­பாடு தளர்த்­தப்­ப­டு­வ­தாக கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­குழு கடந்த வியா­ழக்

கிழ­மை­யன்று அறி­வித்­தது.

கொவிட்-19 உட­னான இயல்பு வாழ்க்­கைத் தொட­ரும் அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் கடைப்

பிடித்து எச்­ச­ரிக்கை நிலையை மஞ்­ச­ளி­லி­ருந்து பச்­சைக்கு மாற்­றி­யதை அடுத்து, இந்த முகக்­க­வ­சக் கட்­டுப்­பாடு தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

உல­க­ளா­விய, உள்­ளூர் நிலை­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் தீவி­ரம் குறைந்து சீர­டைந்­துள்­ள­தால் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­டு­வ­தா­கப் பணிக் குழு தெரி­வித்­தது.

குறிப்­பாக, தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு ஒரு­வேளை கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அது இலே­சான பாதிப்பை மட்­டுமே ஏற்­ப­டுத்­து­வதை அது சுட்­டி­யது.

இந்­நி­லை­யில், சுகா­தா­ரப்

பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்­குச் செல்­லும் ஊழி­யர்­கள், நோயா­ளி­கள், நோயா­ளி­க­ளைக் காணச் செல்­ப­வர்­கள் ஆகி­யோர் முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்ள

வேண்­டும் என்று தெரி­விக்­கப்

பட்­டது.

இந்த விதி­முறை மருத்­துவ

மனை­கள், மருந்­த­கங்­கள், தாதிமை இல்­லங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கும் பொருந்­தும்.