கௌரவத் தூதர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு

கௌரவத் தூதர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்வு

1 mins read
0b75d524-ec43-42dd-8f0a-b1c6eb27b0d0
-

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து செயல்­படும் சிங்­கப்­பூ­ருக்­கான கௌர­வத் தூதர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில் இவ்­வா­ரம் ஷங்­ரிலா ஹோட்­ட­லில் கூட்­டங்­கள் நடை­பெ­று­கின்­றன.

இந்­தக் கூட்­டங்­க­ளுக்கு வெளி­யு­றவு அமைச்சு ஏற்­பாடு செய்­துள்­ளது. ஒன்­ப­தா­வது முறை­யாக நடத்­தப்­படும் இக்­கூட்­டத்­தில் 27 கௌர­வத் தூதர்­கள் கலந்­து­கொள்­கின்­ற­னர்.

தற்­போது 29 நாடு­க­ளி­

லி­ருந்து செயல்­படும் 34 கௌர­வத் தூதர்­களை சிங்­கப்­பூர் கொண்­டுள்­ளது.

வெளி­நா­டு­களில் இருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஏதே­னும் பிரச்­சினை ஏற்­பட்­டால் இவர்­கள் உத­வு­கின்­ற­னர். விசா விண்­ணப்­பம், கடப்­பி­தழ் புதுப்­பிப்­பி­லும் உத­வு­கின்­ற­னர். இப்­ப­ணி­

க­ளுக்­காக இவர்­கள் சம்­ப­ளம் பெறு­வ­தில்லை. நேற்று முதல் நாள் கூட்டம் நடை­பெற்­றது. அதில் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கலந்­து­கொண்டு பேசி­னார்.

சிங்­கப்­பூர் தூதர் இல்­லாத நாடு­களில் இந்­தக் கௌர­வத் தூதர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வு­வ­தில் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­வர்­க­ளாக இருப்­ப­தாக அவர் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

இந்தக் கௌரவத் தூதர்களின் பங்களிப்புக்குப் பிரதமர் லீ சியன் லூங் நன்றி தெரிவித்துள்ளார்.