தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறதி நோய் சமூகத்திற்கு உதவும் புதிய பங்காளித்துவம்

3 mins read
12f3a10f-0815-4db4-a4e8-ea0d71b45c61
-

அனுஷா செல்­வ­மணி

பரா­ம­ரிப்­பா­ளர்­கள் கண்­கா­ணித்து வரும் மறதி நோயா­ளி­கள் தொலைந்து போய்­விட்­டால், அவர்­களை எளி­தில் தேடு­வ­தற்கு சமூ­கம் உதவிக்கரம் நீட்­டி­யுள்­ளது.

டிமென்­ஷியா சிங்­கப்­பூர் அமைப்­பின் 'காரா' செய­லி­யும் நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கத்­தின் 'ஒன் சர்­விஸ்' செய­லி­யும் மறதி நோயா­ளி­க­ளுக்கு ஆத­ரவு அளிக்­கும் முனைப்­பில் கைகோத்­துள்­ளன. மறதி நோயா­ளி­கள் தொலைந்­து­போ­னால் அவர்­களை முடிந்த அளவு விரை­வாக குடும்­பத்­தி­ன­ரி­டம் ஒப்­ப­டைக்க இவை கடப்­பாடு தெரி­வித்­துள்­ளன.

புக்­கிட் பாத்­தோக் நியூ ஹொராய்­ஸன் நிலை­யத்­தில் நேற்­றுக் காலை நடை­பெற்ற இந்­தப் பங்­கா­ளித்­து­வத்­தின் தொடக்­க­வி­ழா­வில் வெளி­யு­றவு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்­சர் சிம் ஆன் கலந்­து­கொண்டு சிறப்­பித்­தார்.

தற்­போது 100,000 முதி­ய­வர்­கள் மறதி நோயால் பாதிக்­கப்­பட்டுள்­ள­னர். இன்­னும் ஏழு ஆண்­டுக்­குள் அது 150,000ஆக அதி­கரிக்­கக்­கூ­டும்.

பரா­ம­ரிப்­பா­ளர்­கள் மட்­டு­மின்றி, பொதுமக்­களும் இந்­தச் செய­லி­க­ளைப் பதி­வி­றக்­கம் செய்ய ஊக்­கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர். மறதி நோயாளி ஒரு­வர் தொலைந்­து­விட்­டால், 'காரா' செய­லி­யின் புதிய அம்­சம் மூலம் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் புகார் அளிக்­க­லாம்.

'காரா' உறுப்­பி­னர்­க­ளி­டம் அந்­தப் புகா­ரில் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­வர் பற்­றித் தெரி­விக்­கப்­படும். இதைத் தொடர்ந்து, தொலைந்து போன­வர் கடை­சி­யா­கக் காணப்­பட்ட இடத்­தின் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு 'ஒன் சர்­விஸ்' செயலி மூலம் அறி­விக்­கப்­படும்.

தொலைந்­து­போ­ன­வ­ரின் புகைப்­ப­டம், வெளித்­தோற்­றம், அவர் எங்கு கடை­சி­யா­கக் காணப்­பட்­டார் ஆகிய விவ­ரங்­கள் அனுப்­பப்­படும். தொலைந்­து­போ­ன­வர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டா­லும் செய­லி­யைப் பயன்­ப­டுத்­து­வோ­ருக்கு தக­வல் தரப்­படும்.

கடந்த மாத நில­வ­ரப்­படி, 'காரா' செய­லியை 4,000 பேர் பயன்­ப­டுத்­து­கி­றார்­கள். 'ஒன் சர்­விஸ்' செய­லியை 500,000க்கு மேற்­பட்­ட­வர்­கள் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

சமூ­கத்­தில் யாரா­வது பார்ப்­ப­தற்கு குழப்­ப­மா­கவோ தொலைந்து­போ­ன­து­போ­லவோ தென்­பட்­டால், தொலைந்­து­போ­ன­வ­ராக நம்­பப்­ப­டு­ப­வர் 'காரா' அட்டை வைத்­துள்­ளாரா என்று பொதுமக்கள் முத­லில் கவ­னிக்க வேண்­டும்.

அட்டை இருக்­கும் பட்­சத்­தில், அதற்­குப் பின்­னால் இருக்­கும் கியூ­ஆர் குறி­யீட்­டைத் திறன்­பே­சி­யில் வருடி, பொது­மக்­கள் தங்­கள் பெயர், திறன்­பேசி எண் ஆகிய விவ­ரங்­க­ளைப் பதிவு செய்­ய­வேண்­டும். பிறகு, அழைப்­புப் பொத்­தான் மூலம் பரா­ம­ரிப்­பா­ளர் அல்­லது குடும்­பத்­தி­ன­ரைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.

புதிய அம்­சம் பொது­மக்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்­கு­ முன், கடந்த நவம்­பர் மாதம் சோத­னை­யோட்­டம் நடத்­தப்­பட்­டது. இது­வரை ஏழு மறதி நோயா­ளி­கள் 'காரா' செயலி மூலம் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

"மறதி நோய் உள்­ள­வர்­களைப் பரா­ம­ரிப்­பது எளி­தல்ல. அவர்­கள் தொலைந்­து­விட்­டால், குடும்­பத்­தி­ன­ரும் பரா­ம­ரிப்­பா­ள­ரும் எதிர்­கொள்­ளும் வேதனை மிகக் கவ­லைக்­கு­ரி­யது. இந்­தச் செய­லி­கள் அதைப் போக்க வழி­வகுக்­கும். செய­லி­களை மட்­டும் சார்ந்து இருக்­கா­மல், நாம் விழிப்­பு­ணர்­வோடு செயல்­ப­ட­வேண்­டும். நோயா­ளி­கள் ஒரு பாது­காப்­பான சமூ­கத்­தில் வாழ்­வ­தற்கு நாம் ஆத­ரவு அளிக்க வேண்­டும்," என்று வலி­யு­றுத்­தி­னார் மூத்த துணை­ய­மைச்­சர் சிம் ஆன்.

கடந்த 15 ஆண்­டு­க­ளாக மன­ந­லத் துறை­யில் பணி­பு­ரிந்து வரும் திரு சந்­தி­ர­ஜோதி, நியூ ஹொராய்­ஸன் நிலை­யத்­தின் குழும மேலா­ள­ராக இருக்­கி­றார். இவ­ரு­டைய தாயார் மறதி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர். ஏழு சகோ­த­ரர்­க­ளு­டன் பிறந்த சந்­தி­ர­ஜோதி, தன்­னு­டைய தாயா­ரின் மறை­வுக்­கு­முன் அவ­ரைக் கண்­ணும் கருத்­து­மா­கப் பரா­ம­ரித்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

மறதி நோயை அலட்­சி­யப்­படுத்­தக்­கூ­டாது என்று கூறும் அவர், இது­கு­றித்த பொது­மக்­களின் விழிப்­பு­ணர்­வுக்கு இச்­செ­ய­லி­கள் உத­வும் என்­று குறிப்பிட்டார்.