குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியருக்கு ஆதரவு

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியருக்கு ஆதரவு

3 mins read
93a09b6d-7bfd-480e-8225-6049309aa027
-

ரொக்க அன்­ப­ளிப்­பு­கள், மானி­யங்­கள், நிவா­ர­ணம், கூடு­தல் கால தந்­தை­யர் விடுப்பு எனப் பல்­வேறு வகை­க­ளி­லும் குழந்தை பெற்­றுக்­கொள்ள விரும்­பும் தம்­ப­தி­யர் மேம்­பட்ட ஆத­ரவை எதிர்­பார்க்­க­லாம். பிள்ளை வளர்ப்­பின் ஆரம்­ப­கா­லத்­தில் குடும்­பங்­க­ளுக்­கான ஆத­ரவை அர­சாங்­கம் ஊக்­கு­விக்­கும் வண்­ணம் அமைந்த இத்­திட்­டங்­கள் குறித்து நேற்று தமது வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் துணைப் பிர­த­ம­ரும் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் அறி­வித்­தார்.

குழந்தை போனஸ் ரொக்க

அன்­ப­ளிப்­புத் தொகை அதி­க­ரிப்பு

'குழந்தை போனஸ்' ரொக்க அன்­ப­ளிப்­புத் திட்­டத்­தின்­கீழ் இனி பிறக்­கும் குழந்­தை­க­ளுக்குக் கூடு­த­லாக $3,000 வழங்­கப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தமது வர­வு­செ­ல­வுத் திட்ட உரை­யில் அறி­வித்­தார். குழந்தை ஆறரை வயது ஆகும்­வரை நிதி ஆத­ரவு வழங்­கும் நோக்­கில் ஆறு மாத இடை­வெ­ளி­யில் தொகை பிரித்­துத் தரப்­படும் என்று அவர் விளக்­கி­னார். தகு­தி­பெ­றும் முதலாவது, இரண்­டா­வது பிள்­ளை­க­ளுக்கு $8,000க்குப் பதி­லாக $11,000 வழங்­கப்­படும். மூன்­றா­வது பிள்ளை முதல் $10,000க்குப் பதி­லாக $13,000 வழங்­கப்­படும்.

குழந்தை வளர்ப்­பில் ஏற்­படும் செல­வு­க­ளைச் சமா­ளிக்க தற்­போது குழந்­தை­யின் முதல் 18 மாதங்­களில் ஐந்து தவ­ணை­

க­ளாக குழந்தை போனஸ் ரொக்க அன்­ப­ளிப்­புத் தொகை தரப்­ப­டு­கிறது.

பிள்ளை மேம்­பாட்­டுக் கணக்­கில் கூடு­தல் நிதி

பிள்ளை மேம்­பாட்­டுக் கணக்கு தொடக்க மானி­யம் $2,000 உயர்­வ­தா­க­வும் திரு வோங் குறிப்­பிட்­டார். இதன்­படி நேற்று முதல் பிறக்­கும் குழந்­தை­க­ளுக்­காக $3,000க்குப் பதி­லாக $5,000 வழங்­கப்­படும். பாலர் பள்ளி, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு தொடர்­பான செல­வு­க­ளுக்­குப் பெற்­றோர்­ இத்­தொ­கை­யைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­லாம்.

தம்­ப­தி­ய­ரின் முத­லாம், இரண்­டாம் குழந்­தைக்கு அர­சாங்­கம் வெள்­ளிக்கு வெள்ளி வழங்­கும் அதி­க­பட்­சத் தொகை­யும் $1,000 அதி­க­ரிக்­க­வுள்­ளது.

இதன்­படி, முதல் குழந்­தைக்கு அர­சாங்­கம் வெள்­ளிக்கு வெள்­ளி­யாக $4,000 வரை­யி­லும் இரண்­டா­வது குழந்­தைக்கு $7,000 வரை­யி­லும் தரும். மேம்­ப­டுத்­தப்­பட்ட திட்­டங்­க­ளால் முதல் குழந்­தைக்­குப் பெற்­றோர் $24,000 வரை­யி­லும் அடுத்­த­டுத்த பிள்­ளை­

க­ளுக்கு $37,000 வரை­யி­லும் நிதி ஆத­ர­வுக்­குத் தகு­தி­பெ­ற­லாம்.

குழந்தை ஆத­ரவு மானி­யத்

திட்­டம் நீட்­டிப்பு

பெற்­றோ­ருக்­குக் கடந்­தாண்டு அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­கும் இவ்­வாண்டு பிப்­ர­வரி 13ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் குழந்தை பிறந்­தி­ருந்­தால் அவர்

­க­ளுக்கு குழந்தை ஆத­ரவு மானி­யத் தொகை­யாக $3,000 வழங்­கப்­படும்.

முன்­னதாக, 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் 1ஆம் தேதிக்­கும் கடந்­தாண்டு செப்­டம்­பர் 30ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் பிறந்த சிங்­கப்­பூ­ர் குழந்­தை­க­ளுக்­காக கொவிட்-19 கொள்­ளை­நோய் கால­கட்­டத்­தில் இந்த மானி­யத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

வேலை செய்­யும் தாய்­மா­ருக்­கான பிள்ளை வரி நிவா­ர­ணம்

குழந்தை பெற்ற பிற­கும் தாய்­மார்­கள் தொடர்ந்து ஊழி­ய­ர­ணி­யில் நீடிப்­பதை ஊக்­கு­விக்க 'வேலை செய்­யும் தாய்­மா­ருக்­கான பிள்ளை வரி நிவா­ர­ணத்' திட்­டம் அறி­மு­க­மா­னது.

குழந்­தை­கள் அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் பிறந்­தாலோ தத்­தெ­டுக்­கப்­பட்­டாலோ தாய்­மா­ரின் வரு­மா­னத்­தின் ஒரு குறிப்­பிட்ட விழுக்காட்டுக்­குப் பதி­லாக மாறாத தொகை நிவா­ர­ண­மாக மாற்­றப்­படும்.

தகு­தி­பெ­றும் வேலை செய்­யும் தாய்­மார்­கள், முதல் குழந்­தைக்கு $8,000யும் இரண்­டா­வது குழந்­தைக்கு $10,000யும் அடுத்­த­டுத்த குழந்­தை­க­ளுக்கு $12,000 வரி நிவா­ர­ண­மும் கோர­லாம்.

வெளி­நாட்டுப் பணி­ப்பெண் தீர்வை வரி நிவா­ர­ணம்

வேலை செய்­யும் திரு­ம­ண­மான மாதருக்கான வெளிநாட்டுப் பணிப்பெண் தீர்வை 2025ஆம் ஆண்டு முதல் ரத்து செய்­யப்­ப­ட­உள்­ளது. 16 வய­துக்­குக் கீழ் இளம் பிள்­ளை­கள் உள்ள குடும்­பங்­களில் இக்­கு­றிப்­பிட்ட பிரி­வி­னருக்கு உத­வி­வர, ஏற்­கெ­னவே வெளி­நாட்டுப் பணி­யா­ளர் தீர்வை சலு­கை இருப்­ப­தால் இத்­திட்­டம் நிறுத்­தப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.