பெண்கள் கழிப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த முழுநேர தேசிய சேவையாளர்

பெண்கள் கழிப்பறைக்குள் அத்துமீறி நுழைந்த முழுநேர தேசிய சேவையாளர்

1 mins read
ee6b9fb9-e90c-406e-8c4e-1408981e3a56
-

சிங்­கப்­பூர் காவல் படை­யில் முழு நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்­த­போது, ஜோன­தன் சுவா வெய் கோங் எனும் ஆட­வர் பெண்­கள் கழிப்­ப­றை­யில் அத்­து­மீறி நுழைந்­தார். அப்­போது பெண் அதி­காரி ஒரு­வர் குளி­ய­ல­றை­யில் குளித்­துக்­கொண்­டி­ருந்­த­தா­கக் கூறப்­படுகிறது.

சுவா தனது கைத்­தொ­லை­பே­சியை, அதி­காரி குளித்­துக்­கொண்­டி­ருந்த அறை­யின் மேல்­பு­றத்­தில் வைத்­தார்.

'ஆவி' ஒன்று தன்­னைப் பீடித்­தி­ருப்­ப­தா­க­வும் அத­னால் தான் பெண்­கள் கழிப்­ப­றைக்­குள் நுழைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அவர் கூறி­னார். அந்த நேரத்­தில் என்ன நடந்­தது என்று தனக்கு நினை­வில்லை என்­றார் அவர்.

விசா­ர­ணைக்­குப் பிறகு நேற்று சுவா மீது அத்­து­மீறி நுழைந்­தது, பெண்ணை மான­பங்­கப்­ப­டுத்­தி­யது ஆகி­யவை தொடர்­பில் இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

பாதிக்­கப்­பட்ட பெண் காவல்­துறை அதி­காரி பற்­றிய மேல்­வி­வ­ரங்­களை வெளி­யிட அனு­மதி இல்லை. 2019ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி, பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு சுவா­வு­டன் மேலும் இரு தேசிய சேவை­யா­ளர்­கள் ஆண்­கள் கழிப்­ப­றைக்­குச் சென்­ற­னர். தாங்­கள் முத­லில் வெளி­யே­றி­ய­தா­க­வும் சுவா சிறிது நேரங்­க­ழித்தே தங்­க­ளு­டன் இணைந்­து­கொண்­ட­தா­க­வும் அவ்­வி­ரு­வ­ரும் கூறி­னர்.

பாதிக்­கப்­பட்­ட­வர் புகா­ர­ளித்­த­தன்­பே­ரில் சுவா­வி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது. முத­லில், தான் தவ­று­த­லா­கப் பெண்­கள் கழிப்­ப­றைக் கத­வைத் திறந்­த­தா­க­வும் அப்­போது யாரும் அங்கு குளிக்­க­வில்லை என்­றும் அவர் பொய்­யு­ரைத்­தார்.

அடுத்த மாதம் 22ஆம் தேதி வழக்­கில் தீர்ப்­ப­ளிக்­கப்­படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.