தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பீஷானில் காகங்களின் அட்டகாசம்; முடிவுகட்டும் தேசிய பூங்காக் கழகம்

1 mins read
f4655dc5-a825-403d-bfab-e14bb0588a6b
-

பீஷான் ஸ்திரீட் 12 புளோக் 110இல் காக்­கைக் கூட்­டம் ஒரு வார­மாக அட்­ட­கா­சம் செய்து அவ்­வ­ழி­யா­கச் செல்­பவர் ­க­ளைத் தாக்­கு­வ­தா­கத் தக­வல்­கள் கிடைத்­த­தைத் தொடர்ந்து, அங்­குள்ள காக்கை எண்­ணிக்கை குறைக்­கப்­படும் என்று தேசிய பூங்கா கழ­கம் தெரி­வித்­துள்­ளது. அது குறித்து கழ­கம் பீஷான்-தோ பாயோ நக­ர­மன்­றத்­து­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கிறது.

இவ்­வாண்டு தொடக்­கத்­தில் அப்­பகுதி­யில் 20 நிமி­டத்­தில் 10 பேரைக் காக்­கைக் கூட்­டம் தாக்­கி­ய­தாக ஷின் மின் செய்தி வெளி­யிட்­டது. அத்­த­கைய தாக்­கு­தல்­கள் குறைந்­துள்­ள­போ­தும், காக்­கைக் கூட்­டத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இருக்­கவே செய்­த­னர் என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று கூறி­யது.

சில காகங்­கள், வழிப்­போக்­கர்­க­ளின் பக்­கத்­தில் பறந்­து­சென்று பய­மு­றுத்­தின. சில அவர்­க­ளைத் தாக்­கின. இது ஒரு முறை­மட்­டும் நிக­ழ­வில்லை என்று சிலர் புகார் கூறி­னர்.

காக்­கைக் கூட்­டத்­தின் அட்­ட­கா­சத்­துக்கு முடி­வு­கட்ட, கடந்த 7ஆம் தேதி­யி­லி­ருந்து அப்­ப­கு­தி­யில் உள்ள காக்­கைக் கூடு­க­ளைக் கண்­கா­ணித்து அவற்றை அகற்­றத் தொடங்­கி­யுள்­ள­தாக தேசிய பூங்கா கழ­கம் கூறி­யது.

மரங்­கள் கத்­தி­ரிக்­கப்­படும் என்­றும் காகங்­க­ளுக்­குப் பொறி வைக்­கப்­படும் என்­றும் அது குறிப்­பிட்­டது. காக்­கைக் கூட்­டம் முன்­பு­போல சுட்­டுக்­கொல்­லப் ­ப­டாது. மாறாக சிக்­கிய காகங்­கள் வலி­யில்­லா­மல் கொல்­லப்­படும்.

காகங்கள் பெரு­கு­வ­தைத் தடுக்க பொது­மக்­கள் பங்­காற்­ற­வேண்­டும், அவற்­றுக்கு தீனி போடக்­கூ­டாது என்று நிபு­ணர்­கள் கூறி­னர். காக்­கைக் கூட்­டம் பற்­றிய விழிப்­பு­ணர்வு திட்­டத்தை பீஷான்- தோ பாயோ நக­ர­மன்­றத்­து­டன் தேசிய பூங்கா கழ­கம் நேற்று தொடங்­கி­யது.