உணவுச் சேவை ஊழியர்க்கு படிப்படியான சம்பள உயர்வு

உணவுச் சேவை ஊழியர்க்கு படிப்படியான சம்பள உயர்வு

2 mins read
42304f49-a988-4301-8a1e-0a75bd36109a
-

சமையற்காரர், மேசைப் பணியாளர் போன்றவர்களுக்கு மூவாண்டுகளில் சம்பளம் கூடும்

சமை­யற்­கா­ரர்­கள், மேசைப் பணி­யா­ளர்­கள் போன்ற குறைந்த சம்­பள ஊழி­யர்­க­ள் எதிர்வரும் மூன்று ஆண்­டு­களில் படிப்­ப­டி­யாக சம்­பள உயர்வை எதிர்­பார்க்­க­லாம். உணவு சேவைத் துறை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை நடப்­புக்கு வர­வுள்­ளதே அதற்­குக் கார­ணம்.

அதன்­படி, சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­க­ளாக உள்ள குறைந்த சம்­பள உண­வுச் சேவை ஊழி­யர்­க­ளின் அடிப்­ப­டைச் சம்­ப­ளம் 2023 முதல் 2025 வரை கூடும். அவர்­கள் 19 விழுக்­காடு வரை நிலையான சம்­பள உயர்வைப் பெறு­வார்­கள்.

மார்ச் 1ஆம் தேதி­யி­லி­ருந்து, ஏறத்­தாழ 12,000 முழுநேர உண­வுச் சேவை ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம், படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை­யின் கீழுள்ள ஆரம்­ப­நிலை ஊதி­ய­மான $1,750க்குக் கூடும்.

அந்த அடிப்­ப­டைச் சம்­ப­ளம், 2025ல் $2,080ஆக உய­ரும். அதா­வது மூவாண்­டு­களில் அச்­சம்­ப­ளம் சுமார் 19 விழுக்­காடு கூடும்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள 26,000 முழு­நேர உண­வுச் சேவை ஊழி­யர்­களில் 17,000 பேர் குறைந்த சம்­பள ஊழி­யர்­க­ளா­கக் கரு­தப்­ ப­டு­கின்­ற­னர். அவர்­களில் ஏறத்­தாழ 12,000 ஊழி­யர்­கள், படிப் படி­யான சம்­பள உயர்­வு­மு­றை­யின் ஆரம்­ப­நிலை ஊதி­யத்­தை­விட குறை­வான சம்­ப­ளம் பெறு­கின்­ற­னர்.

உண­வுச் சேவை­க­ளுக்­கான முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வக் குழு இத்­த­க­வல்­களை நேற்று தெரி­வித்­தது. இத்­துறை ஊழி­யர்­ களுக்குப் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை மேற்­கொள்­ளப்­பட வேண்­டும் என்று குழு முன்­வைத்த பரிந்­து­ரையை அர­சாங்­கம் ஏற்­றுக்­கொண்­டது.

இந்த முறை­யில் ஊழி­யர்­களுக்­கான தெளி­வான தொழில்­முன்­னேற்­றப் பாதை­யும் தேவை­யான பயிற்­சி­களும் வகுக்­கப்­பட்­டுள்­ளன. உண­வுச் சேவை­கள் முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வக் குழு­வில் அர­சாங்க அமைப்­பு­கள், தொழிற்­சங்­கங்­கள், துறை­சார்ந்த நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் பிரதி­நி­தி­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் சுமார் 41,000 முழு­நேர, பகு­தி­நேர உண­வுச் சேவை தொழி­லா­ளர்­கள் புதிய பரிந்­து­ரை­க­ளால் பய­ன் அடை­ய­வுள்­ள­னர்.

புதிய விதி­மு­றை­களை ஏற்­றுக்­கொண்டு நடை­மு­றைப்படுத்த முத­லா­ளி­க­ளுக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை ஆறு மாதங்­கள் அவ­கா­சம் வழங்­கப்­படும். முத்­ த­ரப்­புப் பங்­கா­ளி­களும் அது பற்­றிய தக­வல்­களை முத­லா­ளி­ களிடம் பகிர்ந்­து­கொள்­வர்.

ஆறு மாதத்­துக்­குப் பின்­னர், படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை ஏற்­றுக்­கொள்­ளாத முத­லா­ளி­கள் வேலை அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­ப­ட­லாம் என்று மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது. அதா­வது, அவர்­கள் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் வேலை­யில் சேர்க்­கப் புதி­தாக வேலை அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கவோ தற்­போ­தைய ஊழி­யர்­க­ளின் வேலை அனு­ம­தி­யைப் புதுப்­பிக்கவோ தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­ப­ட­லாம்.

படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறை 2012ல் தொடங்­கப்­பட்­டது.

உண­வுச் சேவை­கள் துறை அதை ஏற்­றுக்­கொண்­டுள்ள ஏழா­வது துறை­யா­கும். துப்­பு­ரவு, பாது­காவல், தோட்­டக்­கலை உள்­ளிட்ட ஆறு துறை­க­ளைச் சேர்ந்த குறைந்த சம்­பள ஊழி­யர்­கள் இது­வரை அந்த ­மு­றை­யின் மூலம் பயன்­பெற்­றுள்­ள­னர்.