ஊடுருவிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள அண்மைய பாதுகாப்பு புதுப்பிப்புகளை செய்யுமாறு ஆப்பிள் பயனாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்தப் பாதிப்பு 'வெப்கிட்' குழப்பநிலை ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் கணினிப் பாதுகாப்பு அவசரகாலச் செயற்குழு (SingCert) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதகமேற்படுத்தக்கூடிய இணையத் தரவைப் பயன்படுத்தி, பயனாளர்களின் சாதனத்தில் குறியீடு, வேவு பார்க்கும் மென்பொருள் அல்லது பாதகமான கணினி செயல்பாட்டுக் கட்டளைகளை ஊடுருவிகள் புகுத்த முடியும். அதன் மூலம் சாதனத்தை செயல்பாட்டு கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வெப்கிட் என்பது, ஆப்பிள் செயலிகளான சஃபாரி, ஆப் ஸ்டோர் போன்றவற்றை இயக்கும் ஓர் இணைய உலாவி.
ஐபேட் புரோ (அனைத்து மாடல்களும்), ஐஃபோன் 8, ஐபேட் ஏர் 3வது தலைமுறை, ஐபேட் 5வது தலைமுறை, ஐபேட் மினி 5வது தலைமுறை ஆகியவையும் அவற்றின் மேம்பட்ட பதிப்புகள் ஆகியவற்றையும், குறிப்பிட்ட ஆப்பிள் கணினிகளையும் இது பாதிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

