சிராங்கூன் நார்த் அவென்யூ 4ல் உள்ள புளோக் 539 அருகே ஒரு கார்பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு கார் தீப்பிடித்துக்கொண்டது.
இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 10.40 மணிக்கு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பக்கத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த வேறு ஒரு காரும் பாதிக்கப்பட்டது. தண்ணீரை அடித்து தற்காப்புப் படை தீயை அணைத்தது. யாருக்கும் காயம் இல்லை.

