தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஹீலிங் த டிவைட்' நிறுவனர் மீது மேலும் ஆறு குற்றச்சாட்டுகள்

2 mins read
1997416d-e607-4642-b3b2-a8258b82ab13
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டாம் என்று பிர­சா­ரம் செய்த 'ஹீலிங் த டிவைட்' குழு­வைத் தோற்­று­வித்த ஐரிஸ் கோ (படம்) மீது நேற்று மேலும் ஆறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­கள் தொடர்­பில் சுகா­தார அமைச்­சி­டம் தவ­றான தக­வல் தந்­த­தன் தொடர்­பில் இவ்­வாறு குற்­றம் சாட்­டப்­பட்­டது.

ஜிப்­சன் குவா எனும் 34 வயது பொது­ம­ருத்­து­வ­ரு­டன் இணைந்து திரு­வாட்டி கோ 2021ஆம் ஆண்­டில் ஐந்து சம்­ப­வங்­களில் பொய்­யான தக­வல் தந்­தார்.

ஐவ­ருக்­கு சைனோ­ஃபார்ம் தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக சுகாதார அமைச்­சிற்­குத் தக­வல் அனுப்­பப்பட்டது. உண்­மை­யில் அவர்கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

ஐவருக்கும் கொவிட்-19 தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழைப் பெறு­வ­தற்­காக இவர்­கள் இவ்­வாறு பொய்­யு­ரைத்­த­னர்.

திரு­வாட்டி கோ மீது, தடுப்­பூசி குறித்து தவ­றான தக­வல் தரும் சதித் திட்­டத்­திற்கு உடந்­தை­யாக இருந்­த­தாக ஐந்து குற்­றச்­சாட்­டு­களும் பொய்­யான ஆதா­ரங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­த­தன் தொடர்­பில் ஒரு குற்­றச்­சாட்­டும் சுமத்­தப்­பட்­டன.

இவர் 2021 நவம்­ப­ரில் டீ ஹுய் யீ என்­ப­வ­ருக்கு மன­ந­லக் குறைவு இருப்­ப­தா­கப் பொய்­யான சான்­றி­தழ் பெறத் தூண்­டு­த­லாக விளங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மருத்­து­வர் குவா நோயா­ளி­க­ளுக்­குத் தவ­றான அள­வில் சைனொ­ஃபார்ம் தடுப்­பூ­சி­யைச் செலுத்­தி­னாரா என்­ப­தன் தொடர்­பில் காவல்­துறை மேற்­கொண்ட விசா­ர­ணை­யைத் திசை­தி­ருப்­பும் முயற்­சி­யாக இது கரு­தப்­ப­டு­கிறது.

திரு­வாட்டி கோ மீது இது­வரை மொத்­தம் 10 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. நேற்று அவர் $30,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். இவ்­வ­ழக்­கில் விசா­ர­ணைக்கு முந்­தைய கலந்­து­ரை­யா­டல் இன்று இடம்­பெ­றும்.

முன்­ன­தாக, தான் கைது செய்­யப்­பட்­ட­போது காவல்­து­றை­யி­னர் தனது மடிக்­க­ணினி உள்­ளிட்ட பொருள்­க­ளைத் தவ­றா­கக் கையாண்­ட­தா­கத் திரு­வாட்டி கோ புகா­ர­ளித்­தி­ருந்­தார். அந்­தப் புகாரை சென்ற மாதம் 9ஆம் தேதி மாஜிஸ்­டி­ரேட் நீதி­மன்­றம் நிரா­க­ரித்­தது.

மருத்­து­வர் குவா பொய்­யான கொவிட்-19 தடுப்­பூ­சி­யைச் செலுத்­தி­ய­தன் தொடர்­பில் தற்­கா­லி­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்டு இருக்­கி­றார். அவர்­மீ­தான விசா­ரணை இன்­னும் தொடங்­க­வில்லை.