குடிநுழைவு, சோதனைச் சாவடி கள் ஆணையம் சிங்கப்பூர் எல்லைகளில் பயணிகளுக்கான கூடுதல் தானியங்கி குடிநுழைவு முகப்பு களையும் சரக்குகளை அனுமதிக்கத் துரிதமாக அனுமதிக்க புதிய முறையையும் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 2022ல் எல்லைகள் திறக்கப்பட்டு உலக வர்த்தகம் வேகமடைந்த நிலையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தானியங்கி குடிநுழைவு அனுமதி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. அதன்வழி முதன்முறையாக சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதிபெற்ற வெளிநாட்டுப் பயணிகள் தானியங்கி முகப்புகளைப் பயன்படுத்த குடிநுழைவு அனுமதி பெற்று வருகின்றனர்.
அதற்கு அவர்கள் தானியங்கி முகப்புகளைக் கடக்கும்போது தங்கள் அங்க அடையாங்களை வழங்க வேண்டும். தனியாக முன்பதிவு செய்யத் தேவையில்லை.
மேலும், சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து சக்கர நாற்காலியில் உள்ளவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் சாங்கி விமான நிலையத்தின் குறிப்பிட்ட பயணிகள் கூடங்களில் தானியங்கி குடிநுழைவு அனுமதி முகப்பு களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அத்தகையோர் தானியங்கி முகப்புகளில் தங்கள் பாஸ்போர்டுகளைக் காட்ட வேண்டும். பிறகு் முகப்புகளில் உள்ள புகைப்படக் கருவிகளிலும் அங்க அடையாளப் பதிவுக் கருவிகளிலும் அவர்கள், தங்கள் கருவிழி மற்றும் அங்க அடையாளங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
2022ல் சிங்கப்பூர் எல்லைகளில் மொத்தம் 125 தானியங்கி முகப்புகள் அமைக்கப்பட்டன. இவ்வாண்டு இன்னும் 61 தானியங்கி முகப்புகளை அமைக்கத் திட்டமிடுவதாக ஆணையம் நேற்று கூறியது.
இதற்கிடையே, சரக்குகளுக்குத் துரிதமாக அனுமதி வழங்க, விமான நிலையம், துறைமுகங்கள் ஆகியவற்றில் வழக்கமான சரக்கு வாகனங்களுக்கு காகிதமற்ற அனுமதியளிக்கும் முறையை குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
சரக்கு வாகனமோட்டிகள் முன்பு, நுழைவு அனுமதி, துணை ஆவணங்களின் காகிதப் பிரதிகளை சோதனைச் சாவடிகளை ஒப்படைக்க வேண்டியிருந்தது.
தற்போது வாகனமோட்டிகள், வாகனங்கள் எல்லைச்சாவடியை அடையும் முன்னர் தங்கள் ஓட்டுநர் உரிம எண்ணையும் சரக்கு நுழைவு அனுமதி எண்ணையும் எஸ்ஜிஅரைவல் மின் சேவையின்வழி பதிவு செய்தால் போதும்.
ஆணையத்தின் அதிகாரிகள் அனுமதி வழங்க விவரங்களை சரிபார்ப்பர். இதனால் சரக்கு வாகனங்கள் நுழைவு அனுமதி பெறும் நேரம் ஒரு வாகனத்துக்கு இரண்டு நிமிடம் குறைந்துள்ளதாக ஆணையம் கூறியது.

