தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இவ்­வாண்­டின் ஐந்­தா­வது வேலை­யிட மர­ணம்

2 mins read
1dcb7687-a286-4151-a530-da7f0ff12293
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த சனிக்­கி­ழ­மை­யன்று தெற்­குத் தீவு­களில் இழு­வைப் பட­கி­லி­ருந்து வழி­காட்­டிப் பட­குக்­குத் தாவிய பட­கோட்டி ஒரு­வர் கட­லில் விழுந்து உயிர் இ­ழந்­துள்­ளார். இவ­ரு­டைய மர­ணம் இவ்­வாண்டு ஐந்­தா­வது வேலை­யிட மர­ண­மா­கும்.

அந்த 29 வயது பட­கோட்டி அதி­காலை மூன்று மணிக்கு இழு­வைப் பட­கி­லி­ருந்து வழி­காட்­டிப் பட­குக்குத் தாவும் பொழுது இந்த துய­ரச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக மனி­த­வள அமைச்சு கூறு­கிறது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து தான் விசா­ரித்து வரு­வ­தா­கக் கூறிய அமைச்சு, சிங்­கப்­பூர் கடல்துறை துறைமுக ஆணை­யம் தனது இடர் மதிப்­பீடு, வேலை­யிட நடை­மு­றை­களை முழு­மை­யாக ஆய்வு செய்­யும் வகை­யில் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார ஆய்­வா­ளர் ஒரு­வரை நிய­மிக்­கும்­ப­டி­ ஆ­ணை­யத்­திற்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

இது­பற்­றிக் கூறிய சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம், இந்த விபத்து பற்றி சனிக்­கி­ழமை அன்றே அதி­காலை சுமார் 2.50 மணிக்கு தனது கடல் துறை பாது­காப்பு நிலை­யத்­துக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­ட­தாக விளக்­கி­யது.

ஆப­த்தான கடல் பகு­தி­யில், அதிக கப்­பல்­கள் நெருக்­க­மாக இருக்­கும் சூழ­லில் கப்­பல்­களை பாது­காப்­பாக துறை­மு­கங்­க­ளுக்கு இட்­டுச் செல்­லும் பணியை வழி­காட்­டிப் பட­கோட்­டி­கள் மேற்­கொள்­வது வழக்­கம்.

இதற்­கான நிபு­ணத்­துவப் பயிற்­சியை இவர்­கள் பெற்­றி­ருப்­பர். விபத்து நடந்த சம­யம் அந்த வழி­காட்­டிப் பட­கோட்டி உயிர்­காப்பு உடை அணிந்­தி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம், கரை­யோர காவல் படை, சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை ஆகிய அமைப்­பு­கள் உட­ன­டி­யாக தனது அவ­சர, சுற்­றுக்­கா­வல் குழு­வின் கலங்­களை விபத்து நடந்த இடத்­துக்கு அனுப்பி தேடு­தல், மீட்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தி­யது," என்று ஆணை­யம் தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

அத்­து­டன், வழி­காட்­டிப் பட­கோட்­டியைத் தேடும்­படி முக்­கு­ளிப்­பா­ளர்­கள் பணிக்­கப்­பட்­ட­தா­க­வும் இதற்கு உதவி புரி­யு­மாறு அரு­கி­லுள்ள கப்­பல்­க­ளுக்கு கடல் பாது­காப்பு அறி­விப்­பு­கள் விடுக்­கப்­பட்­ட­தா­க­வும் ஆணை­யம் விளக்­கி­யது. பின்­னர், காலை 11.30 மணி­வாக்­கில் பட­கோட்­டி­யின் உடல் மீட்­கப்­பட்­ட­தாக ஆணை­யம் கூறி­யது.

"பட­கு­க­ளுக்கு இடையே நட­மா­டு­வோர், சூழ­லுக்கு ஏற்­ற­வாறு தகுந்த விழிப்­பு­ணர்­வு­டன் இருக்க வேண்­டும் என்­றும் அவ்­வாறு செயல்­படும் பொழுது இடர்­கள் குறித்து அறிந்­தி­ருப்­பது அவ­சி­யம்," என்றும் மனி­த­வள அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யது. அத்­து­டன், அவர்­கள் தகுந்த உயிர்­காப்பு உடை­­ய­ணிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் அமைச்சு கூறி­யது.

மேலும், கடல் கலங்­களில் ஏறும் பொழு­தும் இறங்­கும் பொழு­தும் மூன்று பிடி­மா­னங்­கள் இருக்க வேண்­டும் என்­றும் அமைச்சு நினை­வு­றுத்­தி­யது.

இந்­தக் கடல் துறை சிப்­பந்­தி­யின் மர­ணம் தவிர இவ்­வாண்டு மேலும் நான்கு வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­துள்­ளது இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.