சீர­மைப்­புப் பணிக்காக ஒன்­றரை ஆண்டுகளுக்கு மூடப்­படும் கேத்தே கட்­ட­டம்

சீர­மைப்­புப் பணிக்காக ஒன்­றரை ஆண்டுகளுக்கு மூடப்­படும் கேத்தே கட்­ட­டம்

1 mins read
dacb117c-dbf9-4c38-bfec-995692676c4a
-

தேசிய நினைவுச் சின்­ன­மாக விளங்­கும் கேத்தே கட்­ட­டம் புத்­து­யி­ரூட்­டும் மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­காக ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு மூடப்­படும் என்று அந்­தக் கட்­டட உரி­மை­யா­ள­ர்களான கேத்தே நிறு­வ­னம் நேற்­றுக் கூறி­யது.

கேத்தே கட்­ட­டம் கடந்த 2003ஆம் ஆண்டு, அதன் வெளித்­தோற்­றம் தவிர, உட்­பு­றம் மேம்­பாடு கண்­டது. அதற்­குப் பிறகு இப்­பொ­ழு­து­தான் அது மீண்­டும் மேம்­ப­டுத்­தப்­படுகிறது.

கேத்தே கட்­ட­டத்­தின் மேம்­பாடு அரு­கி­லுள்ள டோபி காட் பகு­தி­யும் அதன் சுற்­றுப்­பு­ற­மும் புது வடி­வம் பெறு­வ­தற்கு ஆத­ரவு தரும் விதத்­தில் அமை­யும் என்று குறிப்­பிட்ட கேத்தே நிறு­வ­னம், சிங்­கப்­பூ­ரின் மாறி­வ­ரும் தோற்­றத்­திற்கு கேத்தே கட்­ட­டம் முன்­னோ­டி­யாக விளங்­கும் என்று அந்த நிறு­வ­னம் தெரி­வித்­தது.