சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் (என்டியு) சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகமும்(என்யுஎஸ்) உலகின் தலைசிறந்த 50 ஆய்வு நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இவற்றின் ஆய்வுப் பணிகள், உலகளாவிய முக்கிய புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்களின் தீர்வு களுக்கு அடித்தளமாக விளங்கு கின்றன என்று 'கிளாரிவேட்' எனும் அறிவியல் நுண்ணறிவு அமைப்பு சான்று வழங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டில் வெளி யிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை களின் எண்ணிக்கையை அடிப் படையாகக் கொண்டு இரு பல் கலைக்கழகங்களுக்கும் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளன.
பிரிட்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'கிளாரி வேட்' பகுப்பாய்வு நிறுவனம், நேற்று உலகின் தலைசிறந்த 100 ஆய்வாளர்களை வரிசைப்படுத்தும் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 1,013 ஆய்வுக் கட்டுரை களுடன் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தையும் 753 ஆய்வுக் கட்டுரை களுடன் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் 22வது இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
இந்தப் பட்டியலில் சீனாவில் உள்ள சீன அறிவியல் கல்வி நிறுவனம் முதல் இடத்தையும் இதற்கு அடுத்தடுத்த நிலையில் அமெரிக்காவில் உள்ள மேசசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகமும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
உலகளாவிய கண்டுபிடிப்பாளர்களான 3எம், ஏர்பஸ், ரோல்ஸ் -ராய்ஸ் உள்ளிட்ட ஆய்வு நிறுவனங்களை 'கிளாரிவேட்' தரவரிசைப்படுத்துவது இதுவே முதல் முறை. மேலும் கடந்த பத்து ஆண்டு களாக ஆய்வாளர்களால் மேற்கோள் காட்டப்படும் பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே என்டியு ஏழாவது இடத்தைப் பிடித்தது குறித்து கருத்துத் தெரிவித்த என்டியு ஆய்வுப் பிரிவின் உதவித் தலைவரான பேராசிரியர் லியுக் ஓங், மனிதகுலத்திற்கு நன்மையளிக்கும் ஆய்வுகளில் ஆழமாக ஈடு பட்டதற்கும் அதன் கடப்பாட்டுக்கும் வழங்கப்பட்ட சான்று இது, என்று குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட தாக்கத்தை ஏற் படுத்தும் ஆய்வுகளில் ஈடுபடுவது, தொழில்துறை மற்றும் சமூகத்திற்கு பயனளிக்கும் தொழில் முனைவோர் கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவது 'என்டியு 2025' ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.
என்யுஎஸ்ஸின் ஆய்வு, தொழில்நுட்பப் பிரிவின் துணைத் தலைவரான பேராசிரியர் சென் டுசுஹான், குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் தலைசிறந்த ஆய்வுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட என்யுஎஸ் கடப்பாடு கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

