துருக்கியில் மீட்புப் பணியாற்றிய சிங்கப்பூர் குழு நாடு திரும்புகிறது

துருக்கியில் மீட்புப் பணியாற்றிய சிங்கப்பூர் குழு நாடு திரும்புகிறது

2 mins read
89a56964-cfe3-425a-b686-e2fb4a2966a6
-

துருக்­கி­யில் நிகழ்ந்த நில­ந­டுக்­கத்­தில் 38,000க்கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­துள்ள நிலை­யில் அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட மிகச் சிர­ம­மான மீட்­புப் பணி­யில் சிங்­கப்­பூர் குழு­வும் தனது பங்­கை­யாற்றி நாடு திரும்­பு­கிறது.

'ஆப­ரே­ஷன் லயன்­ஹார்ட்' என்று அழைக்­கப்­படும் மீட்­புப் பணி­யில் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யைச் சேர்ந்த 68 பேர் இடம்­பெற்று இருந்­த­னர்.

இம்­மா­தம் 8ஆம் தேதி நகர்ப்­பு­றத் தேடல் மற்­றும் மீட்புச் சாத­னங்­க­ளு­ட­னும் உயி­ரைக் கண்­ட­றி­யும் உப­க­ர­ணங்­க­ளு­ட­னும் இரு­பது அதி­கா­ரி­களை குடி­மைத் தற்­காப்­புப் படை அனுப்பி வைத்­தது. இரண்­டா­வது குழு, 'K9' பிரி­வைச் சேர்ந்த நான்கு மோப்ப நாய்­கள், 48 அதி­கா­ரி­க­ளு­டன் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் அனைத்து சிங்­கப்­பூர் அதி­கா­ரி­களும் இன்று காலை சிங்­கப்­பூர் வரு­கின்­ற­னர்.

அவர்­களை சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம், உள்­துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்­சர் டாக்­டர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம், சிங்­கப்­பூ­ருக்­கான துருக்­கிய தூதர் மெஹ்­மட் புர்­சின் கோனன்லி ஆகி­யோர் வர­வேற்­க­வி­ருக்­கின்­ற­னர்.

சில நாட்­க­ளுக்கு முன்பு துருக்­கி­யின் தேசிய மருத்­துவ மீட்­புக் குழு­வு­டன் இணைந்து அதி­கா­ரி­கள் பணி­யாற்­றி­ய­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

நில­ந­டுக்­கத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மருந்து, கூடா­ரம், வெப்ப உடை­கள் போன்­ற­வற்றை வழங்­கு­வ­தில் குழு முக்­கிய பங்­காற்­றி­ய­தாக அது கூறி­யது.

உள்­ளூர்­வா­சி­க­ளுக்கு தங்­க­ளு­டைய 'உசார்' உடை­களை நட்பு பாராட்­டும் வகை­யில் அதி­கா­ரி­கள் அன்­ப­ளிப்­பாக வழங்­கி­னர்.

"துருக்­கி­யி­லி­ருந்து 'ஆப­ரே­ஷன் லயன்­ஹார்ட்' குழு வெளி­யே­றி­னா­லும் துருக்கி மக்­கள் எங்­கள் இத­யங்­க­ளி­லும் மனதிலும் எப்­போ­தும் இருப்­பார்­கள்," என்று எஸ்­சி­டி­எஃப் குறிப்­பிட்­டது.

சென்ற புதன்­கி­ழமை அன்று தென்­கி­ழக்கு நக­ர­மான கர­மன் மரஸ் தளத்­தில் பணியாற்­றிக் கொண்­டி­ருந்த சிங்­கப்­பூர் குழுவை துருக்­கிக்­கான சிங்­கப் பூர் தூதர் ஜோன­தன் டோவ் சந்­தித்­துப் பேசி­னார்.

அந்த சம­யத்­தில்­தான் எட்டு நாள் தேடல் மீட்­புப் பணிக்­குப் பிறகு சிங்­கப்­பூர் குழு நாடு திரும்­பத் தயா­ரா­கிக் கொண்­டி­ருந்­தது.

இரண்டு மாடிக் கட்­ட­டத்­தின் ஒரு பகுதி இடிந்­து­வி­ழுந்­த­தில் சிக்­கிக்­கெண்ட ஒரு­வ­ரின் ஈனக்­கு­ரல் கேட்டு மீட்­புப் பணி­யில் ஈடு­பட்ட உள்­ளூர் அவ­சர நிர்­வாக அமைப்­புக்­கும் சிங்­கப்­பூர் குழு உத­விக்­க­ரம் நீட்­டி­யி­ருந்­தது.

துருக்­கி­யி­லும் அண்டை நாடான சிரியாவி­லும் நிகழ்ந்த நில­ந­டுக்­கம் மற்­றும் நில அதிர்­வில் பல்­லா­யி­ரக் கணக்­கா­ன­வர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

ஏரா­ள­மான கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­த­தால் பல பேரைக் காண­வில்லை.