பாதுகாப்பு அதிகாரியைத் தாக்கியதாக ஒருவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
e0167d26-303a-4ec3-a978-2247cc7f1526
-

பாது­காப்பு அதி­காரி ஒரு­வ­ரைத் தாக்­கி­ய­தாக ஆடவர் ஒருவர் மீது குற்­றச்சாட்டு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

தனி­யார் பாது­காப்­புத் துறை சட்­டத்­தின்­படி பாது­காப்பு அதி­கா­ரி­களை அலைக்­க­ழிப்­பது, தாக்­கு­வது, காயம் ஏற்­ப­டுத்­து­வது போன்ற குற்­றச்­செ­யல் களுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஆனால் 2022 மே மாதம் இந்­தச் சட்­டம் திருத்­தப்­பட்­டது.

இதன்­படி பாது­காப்பு அதி­கா­ரியை வேண்­டு­மென்றே காயப் ­ப­டுத்­தி­னால் ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் 10,000 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­படும்.

இந்த நிலை­யில் அஃபின்டே முஹ­மட் என்­ப­வ­ரைத் தாக்கி, இழுத்­துத் தள்­ளி­ய­தாக 45 வயது அஜித்­பால் சிங் மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி விடி­யற்­காலை 12.20 மணிக்கு புக்­கிட் பாத்­தோக் ஸ்தி­ரீட் 41ல் உள்ள தனி­யார் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­புப்­பில் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது.

இது குறித்து விடி­யற்­காலை 12.45 மணி­ய­ள­வில் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­து­றை­யி­னர் கூறி­யுள்­ள­னர். ஆனால் இந்­தச் சம்­ப­வத்­துக்­கான கார­ணத்தை காவல்­துறை தெரி­விக்­க­வில்லை.

திரு அஜித்­பால் சிங் மீதான வழக்கு மார்ச் 15ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.