போதைப் பொருள் கடத்தல்; ஆண், பெண் கைது

போதைப் பொருள் கடத்தல்; ஆண், பெண் கைது

1 mins read
53179da7-e133-4f4b-b400-8e76504150f3
-

போதைப் பொருள் கடத்­தல் தொடர்­பில் ஓர் ஆட­வ­ரை­யும் ஒரு பெண்­ணை­யும் காவல் துறை­யி­னர் கைது செய்­துள்­ள­னர், இரு­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள் என்று மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

மொத்­தம் 1.663 கிராம் ஹெரா­யின், 1.32 கிராம் கஞ்சா, 17 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள் ஆகி­யன கைப்­பற்­றப்­பட்­டன.

அதன் மதிப்பு சுமார் 183,000 வெள்ளி. 54 வயது ஆணி­ட­மி­ருந்­தும் 45 வயது பெண்­ணி­ட­மி­ருந்­தும் இவை கைப்­பற்­றப்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி வித்தனர்.

இந்­தச் சம்­ப­வத்­தில் கைப்­பற்றப்­பட்ட ஹெரா­யி­னின் அளவு, ஒரு வாரம் 790 போதைப் புழங்­கி­கள் பயன்­ப­டுத்­தக்கூடி­யது என நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

கைப்­பற்­றப்­பட்ட கஞ்­சா­வின் அளவு, இதே கால­கட்­டத்­தில் 190 போதைப் புழங்­கி­கள் பயன் ­ப­டுத்த முடி­யும்.

கிள­மெண்டி வெஸ்ட் ஸ்தி­ரீட் வட்­டா­ரத்­தில் தம்பதி கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளு­டைய வாக­னத்­தில் இருந்து 7 கிராம் ஹெரா­யின் கைப்பற்றப்பட்டது.

இதை­ய­டுத்து டெக் வாய் கிர­செண்­டில் உள்ள வீட்­டை­யும் அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்டு எஞ்சிய போதைப் பொருள்­ களைக் கைப்­பற்­றி­­னர்.

இரு­வ­ரி­ட­மும் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.