வாகனச் சான்றிதழ் மறுவிற்பனை விலை அதிகம்

2 mins read
2e5514ae-9866-47f7-9004-8b676847bb2c
-

சிங்­கப்­பூ­ரில் ஆடம்­பர கார்­க­ளுக்­கான வரி அதி­க­மா­கும் என்று பிப்­ர­வரி 14ஆம் தேதி அறி­விக்­கப்­பட்­டது. அதிக விலை உள்ள கார்­களை வாங்­கு­வோர் இம்­மா­தம் 22ஆம் தேதி முதல் மேலும் அதிக வரி­யைச் செலுத்த வேண்டி இருக்­கும்.

இந்­நி­லை­யில், மோட்­டார் வியா­பா­ரி­களுக்குக் கடந்த ஏலங்­கள் மூலம் கிடைத்­துள்ள பொதுப் பிரிவு வாக­னங்­க­ளுக்­கான உரி­மைச் சான்­றி­தழின் விலை, மறு­விற்­பனைச் சந்­தை­யில் $100,000க்கும் அதி­க­மா­கக் கூடி இருக்­கிறது.

பொதுப் பிரிவு வாகன உரிமைச் சான்­றி­தழ்­க­ளுக்­கான தேவை மிக அதி­க­மாக உள்ளது.

வியா­பா­ரி­கள் சான்­றிதழுக்கு $100,000க்கும் மேல் கேட்­கி­றார்­கள் என்று தொழில்­துறை வட்­டாரங்­கள் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது.

வாகன உரி­மைச் சான்­றி­தழ்­கள் மாற்­றத்­தக்­கவை. அவற்­றைப் பயன்­ப­டுத்தி ரோல்ஸ்-ராய்ஸ் பாந்­தம் போன்ற விலை­ உயர்ந்த கார்­க­ளைப் பதிய முடி­யும்.

உரி­மைச் சான்­றி­தழ்­ மாற்றக்­கூடி­யது என்­ப­தால் அதைப் பயன்­ப­டுத்தி பதி­வோ­ருக்கு வரி­யில் $434,431 மிச்­சம் ஏற்­படும்.

அது, புதிய கூடுதல் பதிவுக் கட்டண ஏற்பாட்டுக்குள் வராது என்பதே காரணம்.

இடம்­பெ­ற­வி­ருக்­கும் மாற்றங்­கள், அடுத்த சுற்று வாகன உரிமைச் சான்­றி­தழ் ஏலத்­தின்­போது நடப்­புக்கு வரும். பகி­ரங்­கச் சந்­தை­யில் $40,000க்கும் அதிக மதிப்­புள்ள கார்­க­ளுக்கு அதிக வரி விதிக்­கப்­படும்.

ஆடம்­பர கார்­க­ளுக்­கான கூடு­தல் பதிவுக் கட்­ட­ணம், பகி­ரங்க சந்தை­யில் $80,000க்கும் மேற்­பட்ட அதன் மதிப்­புக்கு 320 விழுக்­கா­டாக இருக்­கும். இப்­போது இந்த அளவு 220% ஆக இருக்­கிறது.

பொதுப் பிரிவு சான்­றி­தழ்­கள் மூன்று மாதம் செல்­லு­ப­டி­யா­கும்.

கடந்த டிசம்­பர் மாதம் கிடைத்த சான்­றி­த­ழைக் கொண்டு கூடு­தல் வரியை தவிர்த்­துக்கொள்­ள­லாம்.

இந்­தச் சான்­றி­தழ்­களை மார்ச்­சுக்­குள் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

பிப்­ர­வரி மாதத்­தில் இடம்­பெறும் முதல் ஏலத்­தில் பெறப்­படும் சான்­றி­தழ்­கள் வரும் மே மாதம் வரை செல்­லுபடியாகும்.

புதிய கார்­களில் பெரும்­பாலானவை சான்­றி­த­ழு­டன் விற்­கப்­ப­டு­கின்­றன. அவை ஒன்று அல்­லது இரு வாரங்­களில் பதிந்து­கொள்ள தயா­ராக இருக்­கும்.

அதே நேரத்­தில், மிக அதிக விலை­யுள்ள ஆடம்­பரகார்­கள் தரு­விப்பு ஆணை கிடைத்­ததும்தான் தயா­ரிக்­கப்­படும். அவை சிங்­கப்­பூருக்கு வந்து சேர அதிக காலம் பிடிக்­கும். ஆகை­யால், இத்­த­கைய கார்­கள் பொது­வாக சான்­றி­தழ் இன்­றியே விற்­கப்­ப­டு­கின்­றன.

இத்­த­கைய காரை வாங்­கு­வோர், அவை பதி­யப்­ப­டும்­போது சான்­றி­தழ் கட்­ட­ணத்­தை­யும் வியா­பா­ரிக்குச் செலுத்த வேண்டி இருக்­கும்.

பழைய பொதுப் பிரிவு சான்றி­தழ்­கள் தீரும் வரை அவற்றைத் தங்­க­ளால் முடிந்த அள­வுக்கு விற்க வேண்டி இருக்­கும் என்று கார் வியா­பா­ரி­கள் கூறு­கி­றார்­கள்.

அதிக வரி­யும் விலை­யும் கூடும்­போது கார் விற்­பனை மெது­வ­டை­யும் என்று அவர்கள் எதிர்­பார்க்­கி­றார்­கள்.