முதியோர் மின்னிலக்கமயமாக தீவிர முயற்சி

முதியோர் மின்னிலக்கமயமாக தீவிர முயற்சி

2 mins read
c678de98-ea9b-4fe2-b1f7-67eb265e6d88
-

பொன்­மணி உத­ய­கு­மார்

முதி­யோர், மின்­னி­லக்­க­ம­ய­மாக தயங்­கும் கார­ணங்­களை அறிந்து கொள்­ள­வும் அவர்­கள் மின்­னி­லக்க­மயத்­தில் இணை­ய­ வழி காணவும் தொடர்பு, தக­வல் அமைச்­ச­ர் ஜோச­ஃபின் டியோ மக்கள், பங்காளி, தனியார் எனும் முத்தரப்பினருடன் உரை­யா­டி­னார்.

முதி­யோ­ரில் அதி­கமானோர் இப்­போது மின்­னி­லக்­கப் பயன்­பாடு களை விரும்­பு­வ­தா­க­வும் பயன்­படுத்­து­வ­தா­க­வும் கூறிய அறி­வார்ந்த தேசத் திட்­டத்­துக்குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான அவர், இதன் தொடர்­பில் தொடர்பு, தக­வல் அமைச்சு நடத்­திய ஆய்வு முடி­வு­களை­த் தெரிவித்தார்.

மின்­னி­லக்­க­ம­யம் தங்­கள் வாழ்க்கையை ­எளி­தாக்­கி­யுள்­ளது என்று தெரிவிக்கும் முதி­யோர் அதி­கம் என்­றா­லும் மின்­னி­லக்கக் கட்­டண முறை­க­ளைப் பயன்­படுத்த தெரி­யா­த­வர்­கள் கணி­ச­மாக உள்ளதை அவர் சுட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 99% வீடு­களில் இணைய வச­தி­யும் 92% வீடு­களில் கணினி வச­தி­யும் இருந்­தா­லும் சிலரிடையே மின்­னி­லக்­கப் பயன்­பாட்டுத் திறமை குறை­வாகவே இருக்­க­லாம் என்­ப­தால் இதை மாற்ற தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­து­டன் இணைந்து பல முயற்சி­களில் தொடர்பு, தக­வல் அமைச்சு ஈடு­பட்டு வரு­கிறது என்றாரவர்.

நீ சூன் ஈஸ்ட் வட்­டா­ர மூத்த குடி­மக்­கள் மையத்­தில் முதியோர் மின்­னி­லக்­க­ம­ய சாலைக்­காட்சி நடந்தது. நிகழ்ச்­சி­யில் மூத்த குடி­மக்­கள் கலந்­து­கொண்டு மின்­னிலக்­கக் கட்­டண முறை­களைப் பயன்­ப­டுத்த கற்றனர். மூத்த மின்­னி­லக்­கத் தூதர்­கள் நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்டு முதியோருக்கு உத­வி­னர்.

முதி­யோர் மின்னிலக்கமய மாக அர­சாங்­கம் பல வழி­களில் உத­வு­கிறது என்­றா­லும் இந்­தி­யர் கள் அவற்­றில் கலந்­து­கொள்­வது குறை­வா­கவே உள்ளதாக மூத்­தோர் நல்­வாழ்­வுத் தக­வல்­தொடர்பு தூதர் க. செல்வகி­ருஸ்­ணன், 70, கூறி­னார்.

"அடுத்த 10 ஆண்­டு­களில் மின்­னி­லக்க மாற்­றங்­கள் பெரிய­ள­வில் ஏற்­படும் வாய்ப்­பு­கள் இருப்­ப­தால் இந்த மாற்­றங்­க­ளுக்­கேற்ப முதி­யோர் தொடர்ந்து பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்ள வேண்­டும்," என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

மின்­னி­லக்க மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் மட்­டும் கவனம் செலுத்­தா­மல் அம்­மாற்­றத்­தில் அனை­வ­ரை­யும் சேர்த்­துக் கொண்டு செல்­வ­தி­லும் கவ­னம் செலுத்த வேண்­டும் என்று திரு­வாட்டி டியோ கூறி­னார்

முதி­யோ­ருக்­குத் தகுந்­த­வாறு செய­லி­களை வடி­வ­மைப்­பது, அவர்­க­ளுக்கு அவற்­றைப் பயன்­படுத்த கற்­றுக்­கொ­டுப்­பது போன்ற முயற்­சி­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ரும் ஒன்­றிணைந்து செயல்­பட வேண்­டும் என்­றும் அமைச்­சர் கேட்­டுக்­கொண்­டார்.